search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணைப்பதிவாளர்"

    • 2-9-2023 வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • தள்ளுபடி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உறுப்பினர்கள் தொடர்புடைய கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகி பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) அர்த்தனாரீஸ்வரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செயல்படும் அனைத்து வகை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் இருந்து 31-12-2013-க்கு முன்னர் கடன் பெற்ற உறுப்பினர்களுக்கு கடன் வழங்கியதில் தவணை தவறிய கடன்தாரர்களுக்கு அர–சாணை எண் 40 வீட்டுவசதி மற்றும் நகர் வளர்ச்சி நாள் 16-3-2015 படி தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தின் கீழ் கடன்தாரர்கள் செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டி செலுத்தினால் அவர்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை பெற்று பயனடையலாம்.இந்த தள்ளுபடி சலுகை அரசாணை எண் 31 வீட்டு வசதி மற்றும் நகர் வளர்ச்சி 3-3-2023-ன் படி 6 மாதங்கள் அதாவது 2-9-2023 வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே 31-12-2013-க்கு முன் இணைய நிதி மூலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் இருந்து கடன் பெற்று தவணை தவறிய கடன்தாரர்கள் அனைவரும் இந்த சலுகையை பயன்படுத்தி செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டியை மட்–டும் செலுத்தி தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தள்ளுபடி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உறுப்பினர்கள் தொடர்புடைய கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • விவசாயிகளின் நலன் கருதி அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் கோட்டம் கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் அலுவலகத்தின்கீழ் 34 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. நாகர்கோவில் சரக கள மேலாளர் ஜனவரி 31-ந்தேதி ஓய்வு பெற்றார். இந்நிலையில் 34 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயி கள் குழுக்கடன்கள், தனி நபர் கடன்களுக்காக விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    தற்போது தீர்மானத்திற்கு வைக்கப்பட்ட நிலை யில் கடனுதவிகளை வழங்கு வதற்கு அங்கீகரிக்கும் மேலாளர் பணியிடம் நிரப்பப்படாததால் விவசாயிகளுக்கு சுமார் ரூ.5 கோடி வரையிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கக்கூடிய இப்பணம் தேக்கத்திலும், விவசாயிகள் பயன் பெற முடியாத நிலை யிலும் உள்ளது.

    இதனால் தனிநபர் கடன், குழுக்கடன் வேண்டி விண்ணப்பித்த விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். எந்த நோக்கத்திற்காக, விவசாயிகள் விண்ணப் பித்தார்களோ அந்த விவசாய கடனுதவிகளை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    விவசாயிகளின் நலன் கருதி, அரசு உரிய நடவடிக்கை எடுத்து கள மேலாளர் பணி இடத்தை காலம் தாழ்த்தாமல் உடனடி யாக நிரப்பவேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×