search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணிகர திருட்டு"

    • தனது மகளுடன் விழுப்புரம் ேமற்கு போலீஸ் நிலையம் அருகே நடந்து சென்றார்.
    • மஞ்சுளா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம்அருகே விராட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். அவரது மனைவி மஞ்சுளா. (வயது 36). இவர் இன்று காலை தனது மகளுடன் விழுப்புரம் ேமற்கு போலீஸ் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மஞ்சுளா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உஷாரான மர்ம நபர்கள் நகையுடன்மாயமானார்கள். இதுகுறித்து மஞ்சுளா விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

    • அப்போது கோழிப்பண்ணையில் இருந்த 33 மின்விசிறிகள், மின் மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
    • இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பெரிய காட்டு பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 68). இவருக்கு அதே பகுதியில் கோழி பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணை கடந்த 6 மாதமாக பூட்டி இருந்தது. நேற்று அதன் உரிமையாளர் ராமதாஸ் நேரில் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அப்போது கோழிப்பண்ணையில் இருந்த 33 மின்விசிறிகள், மின் மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும். இதுகுறித்து ராமதாஸ் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×