search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்பு வீரர்கள்"

    • தியாகதுருகம் அருகே கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
    • கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரிய அதிகாரிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே தியாகை ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை (வயது 62), விவசாயி, இவருக்கு அதே பகுதியில் உள்ள முனியப்பர் கோவில் அருகே விவசாய கிணறு மற்றும் நிலம் உள்ளது. நேற்று கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரிய அதிகாரிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது மின்வாரிய அதிகாரி ஒருவர் கிணற்றை எட்டிப் பார்த்தபோது கிணற்றின் சுற்று சுவரில் முட்டைகளை அடைகாத்து க்கொண்டிருந்த மயில் திடீரென பறந்தபோது தவறி கிணற்றில் விழுந்தது. இது குறித்து அங்கிருந்தவர்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையில் கார்த்திகேயன், அருணாச்சலம், சந்தோஷ்குமார், ஜெகன், சங்கர் உள்ளிட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 50 அடி க கிணற்றில் தண்ணீரில் விழுந்து கிடந்த பெண் மயிலை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சிறுவல் காட்டில் பத்திரமாக விட்டு சென்றனர்.

    ×