search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீப்பிடித்து எரிந்து"

    • வீட்டின் மேல் கூரைகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் கூனக்கா பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது வீடு கூரை வீடு ஆகும். இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தார்கள். பின்னர் அதிகாலை நேரம் வீட்டில் புகை வருவதை கண்ட அனைவரும் எழுந்து வீட்டின் வெளியே வந்தனர்.

    அப்போது வீட்டின் மேல் கூரைகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு தீயை அணைக்க முயற்சி த்தனர். இருப்பிடம் மள மள என கூரை வீடு என்பதால் பற்றி கொண்டது.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் வீடு முற்றிலும் தீயில் கருகி சேதமானது. இதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், ஆதார் கார்டு, பள்ளி, வீட்டு பத்திரங்கள், சான்றிதழ்கள் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமானது.

    முதற்கட்ட விசாரணை யில் மின் கசிவின் காரண மாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு நிலைய அலுவ லர்கள் தெரிவித்தனர்.

    ×