search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி ஊக்கத்தொகை"

    • ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்கியுள்ளது.
    • இதனால் 18 ஆயிரத்து 50 பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மதுரை ஆவின் நிறுவனம் கடந்த நிதியாண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லட்சத்து 7 ஆயிரத்து 780 லிட்டர் பால் கொள்முதல் செய்து, 18 லட்சம் லிட்டர் பாலாகவும் மற்றும் பால் உபபொருட்களாகவும் விற்பனை செய்தது. இதன் மூலம் ரூ.13.71 கோடி ஈட்டியுள்ள லாபத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3.75 கோடி தீபாவளி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

    மதுரை ஆவின் நிறுவனம் மொத்தம் 38 ஆயிரத்து 82 உறுப்பினர்களை கொண்டது. 716 கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 71 ஆயிரத்து 400 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு கண்காணிப்பில், பால்வளத்துறை அமைச்சரின் மேற்பார்வையில், நிர்வாக இயக்குநர், ஆணையாளரின் தொழில்நுட்ப அறிவுரைகளின்படி மதுரை ஆவின் பொதுமேலாளர், களப்பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் முழு ஒத்துழைப்புடன் ரூ.13.71 கோடி லாபம் ஈட்டி உள்ளது.

    கால்நடைத்தீவன செலவு உள்ளிட்ட பால் உற்பத்தி செலவு அதிகரிப்பால் திண்டாட்டமாக உள்ள பால் உற்பத்தியாளர்களின் நிலையை கொண்டாட்டமாக மாற்றும் வகையில் (சென்ற ஆண்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிய மொத்த பாலுக்கு) லிட்டர் ஒன்றுக்கு 50 பைசா வீதம் மொத்தம் ரூ.3.75 கோடி வழங்க உத்தரவு பெறப்பட்டு, தற்பொழுது பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3.75 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இதனால் 18 ஆயிரத்து 50 பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×