search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ தொண்டு நாள்"

    • ஆயுதங்கள் ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது
    • தீ விபத்தில் உயிரிழந்த வர்களின் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த நினைவிடத்தில் மலர் வளையம்

    கன்னியாகுமரி :

    1944-ம் வருடம் ஏப்ரல் மாதம் சுமார் மதியம் 2 மணி அளவில் மும்பை விக்டோரியா துறைமுகத்தில் போர்ட் ஸ்டிக்னி என்ற சரக்கு கப்பலில் வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் மும்பை நகரமே பூகம்பம் போல் அதிர்ந்து குலுங்கியது.

    அப்போது தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 66 தீயணைக்கும் படை வீரர்கள் தீயில் கருகி இறந்தார்கள். அவர்களின் தொண்டினை போற்றும் பொருட்டும் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் தியாகத்தினை போற்றும் பொருட்டும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் ஒரு வார காலம் தீயணைப்பு தொண்டு நாளாக கடைபி டிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கன்னியா குமரி தீயணைப்பு நிலை யத்தில் தீயணைப்பு தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்தில் மும்பை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைக்கும் படை வீரர்களுக்கு நீத்தார் நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஜவகர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் மும்பை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் நீத்தார் நினைவு அஞ்சலி கடைப்பிடித்தனர்.

    • 56 தீயணைப்பு வீரர்கள் தீ விபத்தில் பலியாகினர்.
    • தீ தொண்டு நாளாக வருகிற ஏப்ரல்- 14 முதல் 20-ந்தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    பல்லடம் :

    பல்லடம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது மும்பை விக்டோரியா துறைமுகத்தில், கடந்த 1944-ம் ஆண்டு, வெடி மருந்து கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க சென்ற மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 56 தீயணைப்பு வீரர்கள் அந்த தீ விபத்தில் பலியாகினர்.இவர்கள் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. இது இந்தியா முழுவதும் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீ தொண்டு நாளாக வருகிற ஏப்ரல்- 14 முதல் 20-ந்தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பல்லடம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நிலைய அலு வலர் முத்துக்கு மாரசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் நினைவு ஸ்தூபி போல தீயணைப்பு உபகர ணங்களை வைத்து அதற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்த ப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி ரெயின்போ சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், சுந்தர்ராஜன், மற்றும் தீயணைப்புபடை வீரர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் வருகிற 20-ந் தேதி வரை தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி தீ பாதுகாப்பை அறிவோம், உற்பத்தியை அதிகரி ப்போம் என்ற தலைப்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், அலுவ லகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு, துண்டு பிரசுரம் வினியோகிக்கப்ப டும் என்று தீயணை ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×