search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ குளித்த"

    • தமிழ்செல்வி அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது உடலில் தனக்கு த்தானே மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து எரிந்து கொண்டிருந்தது.
    • சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார்.

    அந்தியூர்:

    அந்தியூர் மாரியப்பா வீதி பகுதியை சேர்ந்த மெய்யரசன் (வயது 24). தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தனது தாய் தமிழ்ச்செல்வி உடன் வசித்து வருகின்றார்.

    இவரது தந்தை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி க்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவ மனைக்கு சென்று சரி செய்து மருந்து மாத்திரை கள் சாப்பிட்டு வந்ததார்.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டதால் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மாத்திரைகள் உட்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மெய்யரசன், தாய் தமிழ்செல்வி இருவரும் உறங்க சென்றனர். அதிகாலை 5 மணி அளவில் வீட்டிற்கு வெளியே தமிழ்செல்வி அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது உடலில் தனக்கு த்தானே மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து எரிந்து கொண்டிருந்தது.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தமிழ்செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மெய்யரசன் கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×