search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமலை நாயக்கர் கல்லூரி"

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் முன்னோட்ட மாநாடு நடந்தது.
    • அமெரிக்கன் கல்லூரி இணை பேராசிரியர் முத்துராஜா ஆகியோர் நல்லாட்சி குறித்து விளக்கமளித்தனர்.

    மதுரை

    மதுரை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சுயநிதிப் பிரிவில் ஆட்சியின் புதிய முன்னு தாரணங்கள் என்னும் தலைப்பில் "முன்னோட்ட மாநாடு" நடைபெற்றது. கல்லூரி தலைவர் ராஜ கோபால், செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஐ.ஐ.பி.ஏ. துணை சேர்மன் ஞானபிரபாகரன் வைஸ் வரவேற்றார். கல்லூரி செயலாளர் விஜய ராகவன் தொடக்கவுரை யாற்றினார், கல்லூரித் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கி பேசினார். ஐ.ஐ.பி.ஏ. செயலாளர் பாஸ்கரன் சிறப்பு விருந்தி னர்களை அறிமுகப் படுத்தினார். காந்தி கிராம உதவி பேராசிரியர் சவுந்தர பாண்டியன், அமெரிக்கன் கல்லூரி இணை பேராசிரியர் முத்துராஜா ஆகியோர் நல்லாட்சி குறித்து விளக்கமளித்தனர்.

    இவ்விழாவினை வணிக வியல் கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் நாகசுவாதி ஏற்பாடு செய்தார். உதவிப் பேராசிரியர்கள் இளம் பிறை, சண்முகப் பிரியா, தேன்மொழி ஆகி யோர் விழாவினை ஒருங் கிணைத்தனர்.

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
    • பன்னாட்டு கருத்தரங்க நூலினை கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வெளியிட்டார்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு நடத்தும் கி.ரா.வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கி.ரா.வின் படைப்புலகம் என்னும் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழ் அறி ஞர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் என பலரும் தங்கள் கட்டுரைகள் எழுதி அவற்றை நூலாக்கம் செய்து நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் விஜய ராகவன் தலைமை தாங்கி னார். கல்லூரியின் தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார் சாமி அவர்கள் முன்னிலை வகித்தனர். இயக்குனர் பிரபு வாழ்த்துரை வழங்கி னார்.

    விழாவில் துறைத்தலைவர் பரிமளா வரவேற்றார். முத்துராஜா நன்றி கூறினார். இப்பன்னாட்டு கருத்தரங்க நூலினை கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வெளியிட, சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தர்மன் பெற்றுக்கொண்டார்.

    கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் கருப்ப சாமி, ஜோதி முருகன், முத்துராஜா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×