search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி"

    • கடந்த 2021ம் ஆண்டு முதல் திருப்பூரில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
    • நடப்பாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கவுன்சிலிங் ஜூலை 25-ந்தேதி துவங்கியது.

    திருப்பூர்:

    கடந்த 2021ம் ஆண்டு முதல் திருப்பூரில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதுவரை 2 பேட்ஜ் மாணவர்கள் (200 பேர்) மருத்துவ படிப்பில் இணைந்து மருத்துவபடிப்பு பயின்று வருகின்றனர்.நடப்பாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கவுன்சிலிங் ஜூலை 25-ந்தேதி துவங்கியது. அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 7.5 சதவீத ஒதுக்கீடு, சிறப்பு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது.

    கவுன்சிலிங்கில் பங்கேற்று திருப்பூர் மருத்துவக் கல்லுாரியை 100பேர் தேர்வு செய்துள்ளனர். இவர்கள் நாளை 11-ந்தேதிக்குள் கல்லூரியில் இணைய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் என மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.

    • 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தனர்.
    • அடுத்த கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பது தொடர்பாக இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர். 500 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை சேவையை தொடங்கியுள்ளது.

    இந்தநிலையில் தேசிய மருத்துவ கவுன்சிலில் இருந்து 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தனர். அடுத்த கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பது தொடர்பாக இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அரசு மருத்துவக்கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் விதம், ஆய்வகம், போதுமான டாக்டர்கள் உள்ளார்களா, மருத்துவபடிப்பு மாணவர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கான வசதிகள், சிகிச்சை அளிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து மாலை வரை ஆய்வு செய்தார்கள். அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ஆய்வு குறித்து டீன் முருகேசன் கூறும்போது, அரசு மருத்துவக்கல்லூரிக்கு வரும் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் வழங்குவதற்கு முன் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும்பட்சத்தில் அங்கீகாரத்தை புதுப்பித்து வழங்குவார்கள். நமது கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து ஏற்கனவே தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு அறிக்கை அனுப்பி விட்டோம். 5 பேர் கொண்ட குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். விதிமுறைக்கு உட்பட்டு நாங்கள் திருப்தியாக செய்துள்ளோம். குழு ஆய்வுக்கு பிறகு திருப்தி அளிக்கும்பட்சத்தில் அங்கீகாரம் கிடைக்கும்' என்றார்.

    ×