search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்புவனம் பேரூராட்சி"

    • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள செய்களத்தூர் சமத்துவபுரத்தில் சமுதாயக்கூடத்தில் சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சுமார் 100 கர்ப்பிணி பெண்களுக்கு மானாமதுரை தமிழரசி

    எம்.எல்.ஏ. மஞ்சள், குங்குமம் வைத்து வளையல் அணிவித்தார். அதை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த 5 வகையான உணவு வகைகளை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    விழாவில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், யூனியன் தலைவர் லதாஅண்ணா துரை, துணை தலைவர் முத்துச்சாமி, திருப்புவனம் பேரூராட்சி துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா கான், திருப்புவனம் ஒன்றிய கவுன்சிலர் லாடனேந்தல் சுப்பையா, செய்களத்தூர் மகேந்திரன் மற்றும் ஊட்டச்சத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×