search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தல திருவிழா"

    • திருவிழா 17-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
    • 10-ம் திருவிழாவான 17-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் அமைந்துள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 17-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 8-ம் திருவிழாவான 15-ந்தேதி இரவு சப்பர பவனியும், 9-ம் திருவிழாவான 16-ந்தேதி இரவு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும், 10-ம் திருவிழாவான 17-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

    இந்த திருவிழாவையொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்விளக்கு அலங்காரம், தேர் அலங்காரம், வானவேடிக்கை, மெல்லிசை கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் "பாக்கும்படி" நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகு மரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்ப ணியாளர் உபால்டு தலைமை தாங்கினார். பங்குப்பேரவை துணை தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணை செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் தேர் அலங்காரத்துக்கான முன்பணம் செல்வம் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.

    பாக்கும்படி நிகழ்ச்சி முடிந்ததும் கொடிமர கம்பம் பங்கு மக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகு மாதா தேர் மற்றும் சூசையப்பர் தேர் ஆகிய 2 தேர்களும் பவனிக்கு தயார்படுத்துவதற்காக தேர் கூடத்தில் இருந்து பங்கு மக்களால் இழுத்து வெளியே கொண்டுவிடப்பட்டது.

    • நாளை தொடங்குகிறது
    • திருத்தலம் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் திருவிழா முன்பு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறும். இந்த மாதத்தில் மீன் தொழில் அதிகமாக இருந்து வந்ததால் தேர் பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற்று வந்த திருவிழா பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதம் மாற்றி வைக்கப்பட்டது.

    இருப்பினும் பாரம்பரிய மாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் மட்டும் தேதிப்படி திருவிழா என்று நடை பெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான தேதிப்படி திருவிழா நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது. இதையொட்டி நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், மாலை ஆராதனையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 2-வது நாளான 24-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும் முதல் திருவிருந்து விழாவும் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனியும் அதைத் தொடர்ந்து மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியா குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை உபால்டு, பங்குப்பேரவை துணை தலைவர் செல்வ ராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் இணை பங்கு தந்தையர்கள், பங்கு பேரவையினர் அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ் மாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றது.
    • தேர்பவனியில் ஏராளமான பங்கு மக்கள், பேரவையினர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் நாள் திருவிழாவில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினார். விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ் மாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றது.

    விழாவின் 10-ம் நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பெருவிழா திருப்பலி, 8.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, 10 மணிக்கு திருப்பலி, பகல் 12 மணிக்கு ஆடம்பர தேர்பவனி, இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலி ஆகியவை நடைபெற்றது. தேர்பவனியில் ஏராளமான பங்கு மக்கள், பேரவையினர் கலந்துகொண்டனர்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்டான்லி சகாயம், உதவி பங்குதந்தை யர்கள் ரெஜின், ஸ்டாலின், பங்குபேரவை துணை தலைவர் அலெக்சாண்டர், செயலாளர் எம்.என்.ராஜ பாலன், துணை செயலாளர் கலாமேரி, பொருளாளர் ஆன்றோஸஸி மற்றும் பங்குபேரவையினர், அருட் சகோதரிகள், பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.

    ×