search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டமிட்டு"

    • குமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி மேலிட பொறுப்பாளர் சின்னத்துரை பேச்சு
    • கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.

    மார்த்தாண்டம்:

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் தலைமை தாங்கினார். அவை தலைவர் சிவ.குற்றாலம் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் கே.ஏ.சலாம் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி மேலிட பொறுப்பாளரும், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான தூத்துக்குடி சின்னத்துரை கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் தற்பொழுது ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்று வெளியில் சொல்லிக் கொள்கின்றனர்.

    மகளிர் உரிமை தொகை ரூ.1000 அனைவருக்கும் கொடுப்பதாக தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் தற்போது அனைவருக்கும் கொடுக்கவில்லை. மேலும் தற்பொழுது 1 அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஆய்வு செய்யப்பட்டு அதில் வருமானம் அதிகமாக இருந்தால் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆகையால் இது ஒரு மோசடி திட்டம் ஆகும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் தெளிவான பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

    இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, இளைஞரணி மற்றும் கட்சியில் இருந்து 19 பேரை ஒரு பூத்துக்கு நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். மேலும் 50 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் 810 கமிட்டிகள் உள்ளன. இதை சரியான முறையில் ஒருங்கிணைத்து நாம் திட்டமிட்டு பணியாற்றினால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். இதற்காக அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண் டும். அதன் பிறகு எடப்பாடி யார் சுட்டிக்காட்டுபவரே பிரதமராக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மேரி கமலபாய், அல்போன்சாள், ஒன்றிய செயலாளர்கள் நிமால், மணி, மெர்லியன்ட் தாஸ், ஜார்ஜ், சுதர்சன், அணிச் செயலாளர்கள் வக்கீல் அருள் பிரகாஷ் சிங், ரெஞ்சித், வினோஜ், மனோ, மகாஜி செல்வகுமார், ஜாண் மற்றும் நிர்வாகிகள் முத்தழகன், திருமலை யாண்டி பிள்ளை, முருகன், அண்ணா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சில்வெஸ்டர் நன்றி கூறினார்.

    ×