search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தார்சாலை பணி"

    • தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் ஊராட்சிக்குட்பட்ட பாரத கோவில் முதல் குள்ளகிழவன் வட்டம் வரையும் மற்றும் தாமரை குளம் முதல் நேதாஜி நகர் வரையி ரூ. 6 லட்சம் செலவில் சாலை அமைக்கப்படுகிறது. தேவராஜி எம்.எல்.ஏ. பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை நேற்று தொடங்கி வைத்தார்.

    விழாவில் ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர், நகர மன்ற முன்னாள் துணை தலைவர் பெரியார்தாசன், ஊர் கவுண்டர்கள் கண்ணதாசன், சசிகுமார், ஊர் நாட்டாண்மை சென்றாயன், நகர மன்ற உறுப்பினர் இனியன், ஏலகிரி கிராமம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஹேமாவதி ஜீவா, உள்ளிட்ட ஊர் பெரியோர்கள் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர் முடிவில் எக்ஸெல் ஜி.குமரேசன் நன்றி கூறினார்.

    • 2 வருட ங்களுக்கு முன்பு ரோட்டில் ஜல்லி மட்டும் கொட்டி சென்றனர்.
    • இருசக்கர வாகனங்களில் சென்றாலும் பஞ்சர் ஆகி விடுகிறது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி தாலுகா விற்கு உட்பட்ட பஸ் நிலை யத்தி லிருந்து குறிஞ்சிப்பாடி முதல் எம்.ஆர்.கே. நகர் வழியாக சென்று வரதரா ஜன்பேட்டை, கல்குணம், கிருஷ்ணாபுரம் வரை செல்ல சுமார் 2 கிலோ மீட்ட ருக்கு மேல் உள்ள பழுத டைந்த கிராமசாலையை தார் சாலையாக போடு வதற்காக, சுமார் 2 வருட ங்களுக்கு முன்பு ரோட்டில் ஜல்லி மட்டும் கொட்டி சென்றனர். 

    ஆனால் இது நாள் வரையில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் சாலையை போடாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் சுமார் 2000 ஏக்கர் விவ சாய நிலங்களுக்கு செல்ல பயன்படும் இந்த சாலை யில் பயிர்களுக்கு உரம் இடு வதற்கு மாட்டு வண்டிகளை பயன்படுத்த முடியாமலும், இருசக்கர வாகனங்களில் சென்றாலும் பஞ்சர் ஆகி விடுகிறது. 

    இதனால் ஒவ்வொரு மூட்டையாக தலையில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயி களும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர். உடனடி யாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கிடப்பில் போடப்பட்ட இந்த தார் சாலையை அமைத்து தர விவசாயிகளும், பொதுமக்க ளும் கோரிக்கை வைக்கின்ற னர். கிராம வளர்ச்சியே நம் இந்திய நாட்டின் வளர்ச்சி, விவசாயமே நம் உயிர் நாடி ஆகையால் மாவட்ட நிர்வாக மும், சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளும் காலம் தாழ்த்தாமல் சாலை போடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர். 

    ×