search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாராபுரம் நகர செயலாளர்"

    • ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆதர வாளர்களை சந்தித்து வருகிறார்.
    • அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் 7 முறை நகர செயலாளராக பதவி வகித்துள்ளார்.

    தாராபுரம் :

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என 2 அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆதர வாளர்களை சந்தித்து வருகிறார். ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து தனது அணி சார்பில் மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

    ஓ.பி.எஸ். அணிக்கு தாவல் :- இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் தனது ஆதரவாளர்கள் 200 பேருடன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைய உள்ளார். தாராபுரம் கிளை செயலாளர்கள், அவை தலைவர், நகர பொறுப்பாளர்கள் என நிர்வாகிகள் , தொண்டர்கள் 200 பேருடன் இன்று காலை ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தேனிக்கு புறப்பட்டு சென்றார். தாராபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் 7 முறை நகர செயலாளராக பதவி வகித்துள்ளார். தற்போது தாராபுரம் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க தலைவராகவும் உள்ளார்.அவர் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவியுள்ளது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காமராஜ், ஓ.பி.எஸ். அணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னாள் நகர்மன்ற தலைவர் :- இதனிடையே தாராபுரம் நகர்மன்ற முன்னாள் துணை தலைவரும் அ.தி.மு.க. தொகுதி செயலாளராகவும் இருந்த கோவிந்தராஜ் , அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதலையடுத்து தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அவர் தி.மு.க.வில் இருந்து விலகி ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ×