search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்காலிக சாலை"

    • சுரங்கம் பணி விரைவில் தொடங்குகிறது
    • ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட், 4 மாத காலம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் ரெயில்வே கேட் உள்ளது. வடிவீஸ்வரத்தில் இருந்து ஊட்டுவாழ்மடம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு செல்லும் வகையில் இந்த வழித்தடம் உள்ளது.

    ரெயில் நிலையத்தின் அருகே இந்த கேட் இருப்பதால், ரெயில்கள் வருகை, என்ஜின் சோதனை ஓட்டம் போன்றவற்றுக்காக அடிக்கடி மூடி திறக்கப்படுகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள் கேட் முன்பு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. தினமும் 15 முறைக்கு மேல் கேட் மூடப்படுவதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டு வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கான டெண்டர் விடப்பட்டு, கடந்த 15-ந்தேதி முதல் பணிகள் தொடங்க இருப்ப தாக அறிவிக்கப்பட் டது. இந்த பணி காரணமாக ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட், 4 மாத காலம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே கேட் பகுதியில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

    இதனை பார்த்த ஊட்டு வாழ்மடம் உள்ளிட்ட பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுரங்க பாதைக்காக 4 மாதம் கேட் மூடப்பட்டால், தாங்கள் நாகர் நகருக்கு வருவது சிக்கலாகும். சுமார் ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடிவீஸ்வரம் வர, சுசீந்திரம் சோழன்திட்டை அணை வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்ற வேண்டி வரும்.

    எனவே தற்போதுள்ள ரெயில்வே கேட் அருகே காலியாக இருக்கும் இடத்தில் தற்காலிக சாலை அமைத்து விட்டு அதன்பிறகு சுரங்கப்பாதை பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளிடம் மனுவும் கொடுத்தனர். இதனை தொடர்ந்து ஊட்டுவாழ்மடம் கேட் மூடும் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் தற்காலிக சாலை தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஊட்டுவாழ்மடம் கேட் அருகே உள்ள தனியார் இடத்தை சீரமைத்து தற்காலிக சாலை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்காலிக சாலை அமைப்பதற்காக, தனியார் இடங்களை சீரமைக்கும் பணி இன்று காலை தொடங்கியது. அங்குள்ள மேடு, பள்ளங்கள் மண் கொட்டி நிரப்பப்பட்டது. சாலை அமைக்கப்பட்டதும், அங்கு தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் அனைத்தும் முடிந்ததும், ஊட்டுவாழ்மடம் கேட் மூடப்பட்டு, சுரங்கப்பாதை பணி தொடங்கப்படும் என ரெயில்வே வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    • ஆற்றின் குறுக்கே மணல் கொட்டி தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.
    • சமீபத்தில் பெய்த மழை காரணமாக பழவாற்றில் மழைநீர் வடிந்து வருகிறது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் என்ற ஊரில் பழவாற்றின் குறுக்கே சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் இருந்தது.

    சிறிய பாலமாக இருந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தி விட்டு சுமார் ரூ. 6 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.

    இதற்காக பழைய பாலம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், ஆற்றின் குறுக்கே மணல் கொட்டி தற்காலிக சாலை அமைக்கப்பட்டு அதன் வழியே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் சென்று வந்தன.

    நமச்சிவாயபுரம் கல்யாண சோழபுரம், கடலங்குடி, பூதங்குடி, உத்தரங்குடி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் மயிலாடுதுறை மற்றும் திருமணஞ்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக பழவாற்றில் மழைநீர் வடிந்து வருகிறது.

    இந்த தண்ணீர் அனைத்தும் தேனூர் கதவனை வழியே கடலுக்குள் திருப்பி விடப்படும்.

    தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணிகளுக்காக தேனூர் கதவனை மூடப்பட்டதால் தண்ணீர் தேங்கி தற்காலிக பாலத்தை தண்ணீர் மெல்ல மெல்ல சுழ்ந்து வருகிறது.

    இதனால் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் பாலம் கட்டுமான பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக கதவணையைத் திறந்து தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விரைந்து பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×