search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தறிப்பட்டறை"

    • பிரகாசுக்கு முதுகுத்தண்டு வடத்தில் பிரச்சனை உள்ளது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
    • இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (39). இவரது தந்தை கணேசன் (55). இவர் வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தறிப்பட்டறையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

    பிரகாசுக்கு முதுகுத்தண்டு வடத்தில் பிரச்சனை உள்ளது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார்.

    உடனே அருகில் இருந்த வர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×