search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் மொழி"

    • இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது.
    • இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

    உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. உலகில் பேசப்படும்/பேசப்பட்ட மிகப்பழமையான மொழிகளில்... Worldblaze வரிசைப்படுத்தி உள்ள டாப்-10 மொழிகளை பார்ப்போம்.

    10 வது இடத்தில் லத்தீன் மொழி:

    ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

    9 வது இடத்தில் ஆர்மீனியன் மொழி:

    இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

    8 வது இடத்தில் கொரியன் மொழி:

    கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    7 வது இடத்தில் எபிரேய மொழி:

    இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

    6 வது இடத்தில் அராமிக் மொழி:

    அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

    5 வது இடத்தில் சீன மொழி:

    சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

    4 வது இடத்தில் கிரீக் :

    கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

    3 வது இடத்தில் எகிப்து மொழி:

    ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

    2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி :

    இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இது தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

    1 வது இடத்தில் தமிழ் மொழி:

    5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

    -அம்ரா பாண்டியன்

    • விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் சிலைக்கு கலெக்டர்-எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினர்.
    • தமிழ் மொழியை செம்மொழியாக்க முதலில் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர்.

    திருப்பரங்குன்றம்

    தமிழ் மொழியை செம்மொழியாக்க முதலில் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். அவரது பிறந்தநாள் விளாசேரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

    கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் கோ. தளபதி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சி கவுன்சிலர் இந்திரா காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, ராமர், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், வட்டச் செயலாளர் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல தலைவர் சுவீதா விமல் தலைமையில் கவுன்சிலர்கள் உசிலை சிவா, விஜயா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பிராமணர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தையா தலைமையில் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் பரிதிமாற் கலைஞர் சிலைக்கு அதன் தலைவர்அய்யல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் துணைத்தலைவர் காளிதாசன், பொருளாளர் அண்ணாமலை, மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் தொகுதி தலைவர் ஆறுமுகம் தலைமையில் செயலாளர் மருதமுத்து, கலை இலக்கிய பாசறை செயலாளர் முருகன், நிர்வாகிகள் கணேசமூர்த்தி, பாண்டித்துரை, விஜய், சின்னசாமி உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்தனர்.

    ×