என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழக தேர்தல்"
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள ஒப்புகை சீட்டுடன் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தை செயல்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குசாவடிகளிலும் மின்னணு எந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டு முறையை செயல்படுத்த பொதுமக்களுக்கு செயல் விளக்கம் இன்று தொடங்கியது.
சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர செயல் விளக்கம் அளிக்க 32 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் செல்லும். அங்கு பொது மக்கள் ஓட்டுப்பதிவு செய்து யாருக்கு வாக்களிக்கிறோம் என்கிற தகவலை உறுதி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் அண்ணாநகர் மத்திய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்புகைச்சீட்டு செயல் விளக்க திட்டத்தினை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது. ஓசூர் சட்டசபை தொகுதி இன்னும் காலியானதாக அறிவிக்கப்படவில்லை.
காலியானதாக அறிவித்தால் அதற்கான ஆயத்த பணிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்.
மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு செயல்விளக்கம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் நடத்தப்படும். 10 நாட்களுக்குள் இதனை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். தேவைப்பட்டால் கூடுதலாக நாட்கள் ஒதுக்கப்படும்.
இந்த ஒப்புகை சீட்டு முறையின் மூலம் கள்ள ஓட்டினை தடுக்க முடியும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வதோடு, ஓட்டு எண்ணிக்கையின் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் இந்த பெட்டியினை திறந்து அதில் உள்ள சீட்டினை எண்ண முடியும். வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு தருவதில்லை. 7 வினாடிகள் மட்டுமே பார்க்க முடியும்.
ஒருவாகனம் தினமும் 5 வாக்குச்சாவடிகளுக்கு சென்று செயல் விளக்கம் அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
செயல்விளக்க நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு ஓட்டுப்பதிவு செய்தனர். துணை தேர்தல் அதிகாரி லலிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #SatyabrataSahoo
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்