search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக சட்டமன்றம்"

    • விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்- அமைச்சர் தென்னரசு
    • இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது- அமைச்சர் கணேசன்

    தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் (ஏப்ரல் 23-ந்தேதி) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்த போதிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், "வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்; இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.

    இருந்தாலும் திமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இந்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து மசோதா நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தகுழுவில் மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
    • மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இந்த குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    தமிழக சட்டமன்ற உறுதி மொழி குழு அதன் தலைவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவருமான வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நாளை இரவு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறது. இந்தகுழுவில் மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் 3-ந்தேதி காலையில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை யில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். பின்னர் காமராஜர் மணி மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அதன் பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் ரூ.7 கோடி செலவில் கூடுதல் படகு தளம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அதன் பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள திருவள்ளு வர் சிலைக்கு தனிபடகு மூலம் செல்கின்றனர். அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளு வர் சிலைக்கும் இடையே கண்ணாடி இழையிலான இணைப்பு கூண்டு பாலம் அமைக்கும் பணியை பார்வையிடுகின்ற னர். அதன் பிறகு இந்த குழுவினர் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று திட்டப் பணிகளை ஆய்வு செய்கின்றனர்.தொடர்ந்து நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இந்த குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    ×