என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தபால் ஊழியர் வீட்டில் கொள்ளை"
நாகர்கோவில்:
நாகர்கோவிலை அடுத்த கீழ பெருவிளையை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 57). நாகராஜன், வெட்டூர்ணி மடத்தில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக உள்ளார். சம்பவதன்று இவர் காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பின்பு அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
நாகராஜன், அன்று வேலை முடிந்து உறவினர் வீட்டிற்கு சென்று மனைவியை அழைத்து கொண்டு மாலையில் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருள்கள் தரையில் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.90 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.
இதுபற்றி நாகராஜன், ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜா மற்றும் போலீசார் நாகராஜன் வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.
வீட்டில் நாகராஜன் மற்றும் அவரது மனைவி இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து பணத்தை கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று சோதனை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் சென்று நின்று விட்டது. எனவே நாகராஜன் வீட்டில் கொள்ளை அடித்தவர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்