search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டவாளத்தில் வாலிபர் பிணம்"

    தஞ்சை அருகே உடல் துண்டாகி தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த குடிகாடு என்ற பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை ஒரு வாலிபர், தலை துண்டாக உடல் துண்டாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தான் இறந்து கிடப்பது தெரியவந்தது.

    மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபரின் சட்ட பையில் தஞ்சை - பூண்டிவரையிலும் செல்வதற்கான ரெயில் டிக்கெட் ஒன்று இருந்தது. எனவே இவர் பூண்டிக்கு ரெயிலில் சென்ற போது தான் இறந்திருக்கிறார். மேலும் தலை தனியாக, உடல் தனியாக கிடந்தது. இதனால் ரெயிலில் அடிப்பட்டு அந்த வாலிபர் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த வாலிபர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. இறந்தவர் பேண்ட் பாக்கெட்டில் ஒரு மெமரிகார்டு இருந்தது. அதில் சில புகைப்படங்கள் இருந்தன. அந்த புகைப்படங்களில் உள்ளவர் தான் தற்போது இறந்தவரா? என்பதும் தெரியவில்லை. எனவே ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×