search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடயவியல் நிபுணர்கள்"

    • தொட்டி கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காணப்படுகிறது.
    • அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவியர் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் பள்ளி மாணவர்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் துர்நாற்றம் வீசியதாக மாணவர்கள் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனை அடுத்து பள்ளி ஆசிரியர் கணேசன் தொட்டியை ஆய்வு செய்தபோது தொட்டியில் துர்நாற்றம் வீசியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாப்பாரப்பட்டி போலீசில் கணேசன் புகார் அளித்ததை அடுத்து பென்னாகரம் டி.எஸ்.பி. மகாலட்சுமி பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொட்டியை சுத்தம் செய்து தொட்டிலிருந்த தண்ணீரை ஆய்வுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    மேலும் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த தொட்டியில் இருந்து மாதிரிகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த குடிநீர் தொட்டி மாணவர்கள் தாகம் தீர்ப்பதற்காக வைக்கப்பட்டுள்ள தொட்டி அல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மாணவர்கள் கழிப்பறையில் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியாகும்.

    இந்த தொட்டி கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காணப்படுகிறது. இருந்தபோதிலும் துர்நாற்றம் வீசுவதால் தொட்டியில் இருந்து மாதிரி நீர் சேகரிகப்பட்டு பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஆய்வறிக்கை வந்த பின்னரே மனித கழிவு தண்ணீரில் கலந்து உள்ளதா என தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பள்ளியில் குடிநீர் தொட்டி வேறு இடத்தில் இருக்கிறது. மனித கழிவு கலக்கப்பட்டதாக கூறப்படும் தொட்டி மாணவர்களின் கழிப்பிடத்திற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியது. மேலும் இத்தொட்டியில் மனித கழிவு கலந்திருப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை. அதிகாரிகள் தொட்டிலிருந்த தண்ணீரை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

    ஆய்வறிக்கையில் மனித கழிவு கலக்கப்பட்டது என்று தெரிய வந்தால் யாராக இருந்தாலும் காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இரவு நேரங்களில் மது பிரியர்களின் தொல்லை அதிகமாக உள்ளது, எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை என்றனர்.

    அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சயனைடு கலந்த மது குடித்து இருவரும் தற்கொலை செய்தனரா? அல்லது கொலையா? என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • டாஸ்மாக் கடை மற்றும் பாருக்குள் சென்று தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி, டிரைவர் விவேக் ஆகிய 2 பேர் பலியாகினர். இதையடுத்து சம்பந்தபட்ட டாஸ்மாக் கடை, பார் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    சயனைடு கலந்த மது குடித்து இருவரும் தற்கொலை செய்தனரா? அல்லது கொலையா? என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று டாஸ்மாக் கடை மற்றும் பாரில் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட தடயவியல் துறை நிபுணர்கள் சென்றனர். அப்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், கலால் தாசில்தார் தங்க.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டன.

    பின்னர் டாஸ்மாக் கடை மற்றும் பாருக்குள் சென்று தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுபாட்டில்கள், பாரில் உள்ள பொருட்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சயனைடு உள்ளதா? எனவும் சோதனை செய்தனர். தொடர்ந்து தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

    இதனை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×