search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasmac bar"

    • பார்களில் தின்பண்டங்கள் விற்பதற்கும் காலி பாட்டில்களை சேகரித்து கொடுப்பதற்கும் டெண்டர் விடப்படும்.
    • சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பார்களுக்கு இன்று இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2000 கடைகளில்தான் பார்கள் இயங்கி வருகின்றன.

    மீதமுள்ள மதுக்கடைகளில் பார்கள் கிடையாது. விதிகளை மீறி அங்கு பார்கள் செயல்படுவதால் வருவாய் இழப்பு ஏற்படுகின்றன.

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பார்கள் இல்லாததால் மது பிரியர்கள் கடைகள் முன்பு ரோட்டில் நின்றபடி மது அருந்தும் நிலை நீடித்து வருகிறது.

    சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பார்கள் டெண்டர் விடப்படவில்லை. பார்களில் தின்பண்டங்கள் விற்பதற்கும் காலி பாட்டில்களை சேகரித்து கொடுப்பதற்கும் டெண்டர் விடப்படும். இதுவரையில் நேரடி டெண்டர் முறை இருந்து வந்தது.

    தற்போது இ-டெண்டர் முதன்முதலாக விடப்பட்டு உள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பார்களுக்கு இன்று இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    இந்த மாத இறுதியில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு பார்கள் நடத்த யார் அதிகபட்ச டெண்டர் குறிப்பிட்டு இருக்கிறார்களோ அவர் களுக்கு பார்கள் நடத்த அனுமதியளிக்கப்படும். நவம்பர் மாதத்தில் பார்கள் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்கள் செயல்படாததால் அரசுக்கு பலகோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    பார் உரிமையாளர்களும் நீண்ட நாட்களாக டெண்டர் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது டெண்டர் விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அவினாசி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் லோகநாதன் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்.
    • முத்துச்சாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவினாசி

    அவினாசியை அடுத்து கருவலூர் டாஸ்மாக் மதுக் கடை அருகில் சட்டவிரோதமாக பார் நடத்தி வருவதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் லோகநாதன் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டபோது அங்கு சட்டவிரோதமாக பார் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    விசாரணையில் சட்டவிரோத பார் நடத்திய நைனாம்பாளையத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அனுமதியின்றி நடத்தப்பட்ட பார் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் டெண்டர் மூலம் பார்கள் நடந்து வந்தன.
    • தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து அனுமதியின்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த 50 சதவீத பார்களை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    சென்னை:

    தஞ்சாவூர் கீழவாசலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திய குப்புசாமி, குட்டி விவேக் என 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அனுமதியின்றி நடத்தப்படும் பார்களை உடனடியாக மூடி சீல் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்தது.

    மாநிலம் முழுவதும் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 3,200 பார்கள் உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் டெண்டர் மூலம் பார்கள் நடந்து வந்தன.

    இந்த டெண்டர் சமீபத்தில் முடிவடைந்தது. பெரும்பாலான பார் உரிமையாளர்கள் அதிக கட்டணம் இருப்பதாக கூறி மீண்டும் டெண்டர் பணம் செலுத்த வில்லை. இதனால் பல பார்கள் அனுமதியின்றி மறைமுகமாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் 214 பார்கள் சீல் வைக்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து அனுமதியின்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த 50 சதவீத பார்களை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது பார் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறியதாவது:-

    சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்கள் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. டாஸ்மாக் நிர்வாகமும் அப்பீல் செய்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் பார்களுக்கு டெண்டர் விடப்பட்டு திறக்கப்படும்.

    மற்ற மாவட்டங்களில் டெண்டர் அதிக தொகை இருப்பதால் ஏராளமான பார் உரிமையாளர்கள் பணம் செலுத்தவில்லை.

    பார் உரிமையாளர்களின் நிலையை பலமுறை அரசுக்கு விளக்கியுள்ளோம். நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

    • தஞ்சாவூரில் பாரில் மதுபானம் வாங்கி அருந்திய 2 பேர் பலியாகினா்.
    • 4 குழுவினா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

    திருப்பூர் :

    தஞ்சாவூரில் பாரில் மதுபானம் வாங்கி அருந்திய 2பேர் பலியாகினா். இதனைத் தொடா்ந்து தமிழக முழுவதும் சட்டவிரோதமாக செயல்படுகிற பாா்கள் மற்றும் போலி மது விற்பனை செய்கிற பாா்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அதிகாரிகள் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனா்.

    திருப்பூா் மாவட்டத்திலும் சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தை சோ்ந்த அதிகாரிகள் என 4 குழுவினா் பிரிந்து சென்று அவிநாசி, தாராபுரம், காங்கேயம், திருப்பூா் உள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது பாா்களில் விற்பனை செய்யப்படுகிற மது வகைகள் மற்றும் பாா்கள் சட்டப்படியும், விதிகளுக்கு உள்பட்டும் இயங்குகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அதிகாரிகள் சோதனைகளுக்கு வருவது அறிந்து தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பாா்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதிகளுக்கு சோதனைக்கு சென்ற அதிகாரிகள் திரும்பி வந்தனா். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதமாக செயல்பட்ட பாா்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளா் சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4 குழுக்களாக சென்று சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் பாா்கள் செயல்படுகிறதா என ஆய்வு செய்தோம். இதில் 30 பாா்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த பாா்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து பல்வேறு பகுதிகளில் பாா்கள் திறக்கப்படவில்லை. இந்த பாா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த பாா்களிலும் சோதனை மேற்கொள்ளப்படும். இதில் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சயனைடு கலந்த மது குடித்து இருவரும் தற்கொலை செய்தனரா? அல்லது கொலையா? என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • டாஸ்மாக் கடை மற்றும் பாருக்குள் சென்று தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி, டிரைவர் விவேக் ஆகிய 2 பேர் பலியாகினர். இதையடுத்து சம்பந்தபட்ட டாஸ்மாக் கடை, பார் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    சயனைடு கலந்த மது குடித்து இருவரும் தற்கொலை செய்தனரா? அல்லது கொலையா? என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று டாஸ்மாக் கடை மற்றும் பாரில் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட தடயவியல் துறை நிபுணர்கள் சென்றனர். அப்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், கலால் தாசில்தார் தங்க.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டன.

    பின்னர் டாஸ்மாக் கடை மற்றும் பாருக்குள் சென்று தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுபாட்டில்கள், பாரில் உள்ள பொருட்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சயனைடு உள்ளதா? எனவும் சோதனை செய்தனர். தொடர்ந்து தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

    இதனை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • குடிபோதையில் வரும் வாகன ஓட்டுகளால் அதிக விபத்து நடக்கிறது.

    கோவை

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. சோமையன்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில், சோமையன்பாளையம்-கவுண்டர்மில் ரோடு அருகே தனியார் பார் ஒன்று உள்ளது.இந்த பாரால் மக்கள் பல இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். பள்ளிக்கூட குழந்தைகள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள். பாரில் குடித்துவிட்டு குடிபோதையில் வரும் வாகன ஓட்டுகளால் அதிக விபத்து நடக்கிறது.

    எனவே போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தனியார் பாரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சூலூர் பகுதி ஊர் மக்கள் அளித்துள்ள மனுவில், சூலூர் கண்ணம்பாளையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு விடுமுறைகளை கடைபிடிக்காமல் டாஸ்மார்க் கடை ஒன்று திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்கனவே மக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும் இப்பகுதியில் டாஸ்மார்க் கடை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காக்க வேண்டும் என்றனர்.

    • அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்கு கூடுதலாக மது விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் உள்ள ஒரு மதுபான பாரில் அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்கு கூடுதலாக மது விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் அந்த மதுபான கூடத்தில் அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

    இதில் அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முறைகேடாக டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட டாஸ்மாக்மேலாளருக்கு புகார்கள் வந்தன.
    • டாஸ்மாக் அதிகாரிகள் கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 250 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கடையின் அருகே பார்களும் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் அனுமதி பெறாமல் பல்வேறு இடங்களில் முறைகேடாக டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட டாஸ்மாக்மேலாளருக்கு புகார்கள் வந்தன.

    அந்தப் புகாரின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

    அந்த சோதனையில் மாவட்டத்தில் 19 இடங்களில் முறைகேடாக பார்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை பூட்டி சீல் வைத்தனர். மேலும் முறைகேடாக டாஸ்மாக் பார் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு போலீசருக்கு புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் 2,802 பார்கள். சென்னையில் மட்டும் 270 பார்கள் உள்ளன. இந்த பார்கள் அனைத்தும் இன்று திறந்ததும் 18 மாதங்களுக்கு முந்தைய காட்சிகள் திரும்பியது.
    சென்னை:

    பார்... பார்... என்று மதுக்கடை பார்களை திரும்பி பார்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உற்சாக பானமும், உற்சாகமாக பார்களும் களைகட்டியது.

    18 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறந்ததால் குழந்தைகள் முகங்களில் மகிழ்ச்சி கரைபுரண்டதை பார்க்க முடிந்தது. அதே போல் தமிழகம் முழுவதும் பார்கள் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

    தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பார்கள் உள்ளன. பார்கள் மூடப்பட்டிருந்த போது குடிமகன்கள் திண்டாடிப்போனார்கள். குடிக்காமல் இருக்கவும் முடியவில்லை. அதேநேரம் குதூகலமாக குடித்து கொண்டாடுவதை அவசர அவசரமாக குடித்துவிட்டு ஓட வேண்டி இருக்கிறதே என்று நேற்றுவரை சலித்துக் கொண்டார்கள்.

    புறநகர் பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் கொஞ்சம் பரவாயில்லை பாட்டில்களை வாங்கி வயல் வெளிகள், தோட்டம், காடுகள், தோப்புகளில் அமர்ந்து குடித்தார்கள்.

    ஆனால் நகர குடிமகன்கள்தான் அல்லாடி போனார்கள். பாட்டில்களை வாங்கி பக்கத்து பெட்டிக்கடைகள், ரோட்டோரங்களில் வைத்து, சந்துகளில், கிடைத்த ஒதுக்கு புறங்களில் நின்று அவசர அவசரமாக குடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். வேறு வழி இல்லாமல் கடந்த 18 மாதங்களாக அப்படித்தான் சமாளித்து கொண்டார்கள்.

    அதிலும் இன் பண்ணிய பேன்ட்-சட்டையுடன் டிப்- டாப்பாக இருப்போரும் வெட்கத்தை விட்டு ரோட்டோரத்தில் நின்றே தங்கள் போதை மோகத்தை தீர்த்துக் கொண்டார்கள்.

    தமிழகம் முழுவதும் 2,802 பார்கள். சென்னையில் மட்டும் 270 பார்கள் உள்ளன. இந்த பார்கள் அனைத்தும் இன்று திறந்ததும் 18 மாதங்களுக்கு முந்தைய காட்சிகள் திரும்பியது.

    மதுபான கடையில் விரும்பிய வகை மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு பார்களுக்குள் சென்றார்கள். உள்ளே நேர்த்தியாக மேசைகள், இருக்கைகள் போடப்பட்டு ஊதுவத்தி மணம் வேறு.

    இப்படி உட்கார்ந்து குடிச்சி எவ்வளவு நாளாச்சு... வந்து அமர்ந்தோமா... கிளாசுக்குள் ஒரு கட்டிங்கை ஊற்றி தண்ணீர் பாக்கெட்டில் சிறு துணை போட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து... அது அப்படியே நுரை பொங்க கிளாசின் மேற்பகுதிக்கு வரும்... நுரை நீங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்திருந்து, கிக் ஏறாவிட்டால் மேலும் ஒரு குவார்ட்டரை வாங்கி வரச்சொல்லி... கடலை, ஆம்லெட், சாலட், சிக்கன் என்று விதவிதமாக ஆர்டர் செய்து.... ஒரு மடக்கு குடித்ததும் ‘சைடிஸ்’ எடுத்து சுவைக்கும் போது எவ்வளவு ரசனையாக இருந்தது.

    தண்ணீர் பாக்கெட் தீர்ந்து விட்டால் தண்ணீர் பாக்கெட் வாங்கிவரச் சொல்லியும்... அப்படியே இரண்டு ஐஸ் கியூபையும் எடுத்துவரச் சொல்லி அதனுள் போட்டு குடிக்கும் போது... ஆகாயத்தில் பறந்தது போல் அல்லவா இருக்கும்!

    அதிலும் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கும் போது மச்சான்... இந்த சரக்கு சரியில்லடா காலையில் எழும்பும் போது தலை பாரமாக இருக்கும் என்று அனுபவத்தை பகிர்ந்தபடி குடித்து மகிழ்வது தனி சுகம்.

    ஆக மொத்தத்தில் மது வெள்ளமும், உற்சாக வெள்ளமும் சேர்ந்து இன்று பார்களில் கரைபுரண்டு ஓடியது. அதில் நீந்தி மகிழ்ந்த குடிமகன்களின் முகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அப்படி ஒரு பிரகாசம் தெரிந்தது.

    பழனி அருகே தனியார் மதுபாரில் மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
    பழனி:

    பழனி லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 41). பழனி நகர அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார்.

    கடந்த 15-ந்தேதி இவர் பழனி அருகே கொடைக்கானல் சாலையில் உள்ள தனியார் மது பாருக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் மதுபானம் கேட்டு தகராறு செய்தார்.

    இதுகுறித்து பார் நிர்வாகியான மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பழனி அடிவாரம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று அடிவாரம் போலீசார் ராஜாமுகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ADMK
    கயத்தாறு அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.98 ஆயிரத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யனாரூத்து ஊருக்கு மேற்கு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக கயத்தாறு அருகே ஆத்திகுளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது 40), விற்பனையாளராக குமாரகிரியைச் சேர்ந்த சுப்புராஜ் (35) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்ததும், வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு, தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர். அப்போது டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.98 ஆயிரத்து 470-யை மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவதற்காக, இசக்கிமுத்து எடுத்து சென்றார்.

    இசக்கிமுத்து மொபட்டிலும், சுப்புராஜ் மோட்டார் சைக்கிளிலும் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் 2 பேரும் அய்யனாரூத்து காற்றாலை பண்ணை அருகில் சென்றபோது, அங்கு காட்டு பகுதியில் மறைத்து இருந்த 3 மர்மநபர்கள் திடீரென்று அரிவாளைக் காண்பித்து 2 பேரையும் வழிமறித்தனர். பின்னர் மர்மநபர்கள் 3 பேரும் அரிவாளை திருப்பி வைத்து இசக்கிமுத்து, சுப்புராஜ் ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கினர்.

    இசக்கிமுத்துவிடம் இருந்த ரூ.98 ஆயிரத்து 470-யை மர்மநபர்கள் கொள்ளை அடித்து விட்டு, மொபட், மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றையும் மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதனால் இசக்கிமுத்து, சுப்புராஜ் ஆகிய 2 பேரும் இரவில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார். காயம் அடைந்த இசக்கிமுத்து, சுப்புராஜ் ஆகிய 2 பேரும் கயத்தாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    கோவை பி.என்.புதூரில் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தங்கவேலு, கிளை செயலாளர் சந்திரன், தி.மு.க.வை சேர்ந்த பன்னீர், குணசேகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பி.என்.புதூர் சென்னிமலை ஆண்டவர் நகரில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. தற்போது குடியிருப்பு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, தேவையற்ற அசம்பாவிதங்களும் ஏற்படும்.

    மேலும் மதுக்கடை திறக்கப்பட உள்ள இடத்தின் அருகே மைதானம் உள்ளது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் இவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இங்கு டாஸ்மாக் மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    கோவை கவுண்டம்பாளையம் உடையார் வீதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

    நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக மண் பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். இதனை நம்பி 40 குடும்பங்கள் உள்ளன. எங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 10 யூனிட் களிமண் தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் நாங்கள் கணுவாய், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து களிமண் எடுத்து வந்து மண்பானை செய்தோம். தற்போது எங்களுக்கு களிமண் எடுக்க அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால் எங்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது. எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு களிமண் எடுக்க நிரந்தர அனுமதி சான்று வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில், வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் மீது சிலர் கடந்த மாதம் 30-ந்தேதி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார் பதிவு செய்யப்பட்டும் குற்றவாளி கைது செய்யப்பட வில்லை.

    டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைந்த பார்களின் உரிமையாளர்கள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்கின்றனர். இதனை எதிர்க்கும் மதுக்கடை ஊழியர்கள் மீது சில நபர்களை தூண்டி விட்டு தாக்குதல் நடத்துகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் டாஸ்மாக் பார்களின் உரிமையை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று உள்ளது.

    கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாபு (வயது 39) என்பவர் அளித்த மனுவில், சிறு வயதில் ஏற்பட்ட நோய் காரணமாக எனது 2 கால்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளியான எனக்கு வடவள்ளி பஸ்நிலையம் அருகே பெட்டிக்கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இருந்தது.

    கோவை அருகே உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அளித்த மனுவில், நாங்கள் தொழிற்சங்கத்தில் முன்னணி நிர்வாகிகளாக இருந்ததால் எங்களை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உள்ளது. எனவே எங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 
    ×