search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கி பயில"

    • விடுதிகளில் தங்கி படிக்க விருப்பமுள்ளவர்கள் விடுதியில் சேருவதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
    • ண்ணப்ப படிவத்தில் மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அதில் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 28 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும் இயங்கி வருகின்றன.

    இதில் 2022-2023-ம் கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி, கல்லூரிக்கு அருகாமையில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்க விருப்பமுள்ளவர்கள் விடுதியில் சேருவதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளரிடம் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக அளிக்கப்பட வேண்டும். விடுதியில் சேர்க்கப்படும் மாணவ, மாணவிகள் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருப்பதை கட்டாயம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    விண்ணப்ப படிவத்தில் மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அதில் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் கட்டாயமாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் ஆதார் கார்டு எண் கட்டாயம் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    பள்ளி விடுதிகளில் சேரு வதற்கான விண்ணப்பங்கள் வருகின்ற 20-ந் தேதி வரையும், கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளுக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி வரையும் சம்மந்தப்பட்ட பள்ளி, கல்லூரி விடுதிகள் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ×