search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகடுகள்"

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
    • இரும்பு தகடுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே மரக்கான்சாவடியில் கடந்த சில தினங்களுக்கு முன் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை வழிமறித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அனந்தநல்லூர் காலனி தெருவை சேர்ந்த செல்வம் மகன் ரஞ்சித் (வயது 34), தேவதாஸ் மகன் சந்தோஷ் குமார் (24), துரைராஜ் மகன் விஜய் (19) ஆகியோர் என்பதும், நாகை- விழுப்புரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியையொட்டி அனந்தநல்லூர் பெரிய வாய்க்காலில் கட்டப்பட்டு வரும் பால பணிகளுக்கு பயன்படுத்த வைத்திருந்த இரும்பு தகடுகளை 3 பேரும் திருடி வாஞ்சூர் பகுதியில் உள்ள இரும்புக்கடையில் விற்பதற்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரும்பு தகடுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×