search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டைம்"

    • உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார்.
    • கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2023-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.

    டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிடும். அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சியை விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்தார்.

    கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன. இந்த பட்டியலில் தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற நபர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    மொத்தம் பதிவான 12 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் 4 சதவீத வாக்குகளைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதான் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, ஷாருக்கான் வாசகர் வாக்கெடுப்பில் வெற்றியாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற டைம் வார இதழை 190 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் பேனியாப் வாங்கியுள்ளார். #TimeMagazine #Salesforce
    நியூயார்க்:

    உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற டைம் வார இதழ் தொடங்கப்பட்டு 95 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், அந்த நிறுவனத்தை சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் பேனியாபும் அவரது மனைவியும் இணைந்து190 மில்லியன் டாலர்களுக்கு (ரூ.1375 கோடி) மெர்டித் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளனர்.

    டைம் பத்திரிக்கையை வாங்கியதற்கும் சேல்ஸ்போர் நிறுவனத்திற்கு தொடர்பு இல்லை என்றும், பேனியாபும் அவரது மனைவியும் தனிநபர்கள் என்ற முறையிலேயே டைம் இதழை வாங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பத்திரிகையை வாங்கினாலும், டைம் பத்திரிக்கையின் அன்றாட நடவடிக்கைகளிலோ இதழியல் சார்ந்த முடிவுகளிலோ பேனியாப் தலையிட மாட்டார் என்றும், அதை தற்போதுள்ள நிர்வாகத் தலைமைக் குழுவே மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×