search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்டர்"

    • கோவையில் போக்குவரத்து அமைச்சர் பேசினார்
    • மகளிர் இலவச பயணத்திற்காக ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கோவை.

    கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சுங்கம் கிளையில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி மற்றும் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்புகளில் பணிமனை அளவில் முதல் 3 மதிப்பெண்களைப் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது.

    இதில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணி ஆணைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    பின்னர் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

    பணிக்காலத்தில் உயிரிழந்த, பணி ஓய்வு பெற்றவர்கள் என 5881 குடும்பங்களுக்கு ரூ.1582 கோடி 3 கட்டமாக ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகின்றது.

    முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு போக்குவரத்து துறையில் கவனம் செலுத்தி வருகின்றார் .

    மகளிருக்கான கட்டணமில்லா பயணம் விடியல் பயணம் என முதல்வர் அறிவித்து இருக்கின்றார். மகளிர் பயணத்திற்காக ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தொகை ஒதுக்கீடு செய்து இருப்பதால்தான் போக்குவரத்து துறை சிரமம் இல்லாமல் செயல் படுகின்றது. ஒரு புறம் மகளிர் வாழ்வில் மறு மலர்ச்சி ஏற்படுவதுடன், இன்னொரு புறம் போக்குவரத்து துறை வளர்ச்சி பெறுகின்றது.

    தேர்தல் நேரத்தில் சொன்னவற்றை முதல்வர் செய்து வருகின்றார். பல மாநிலங்களில் போக்குவரத்து துறையில் சம்பளம் கொடுக்கப்படாத நிலை இருக்கின்றது.

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் பணியாளர்கள் ஆன் லைனில் விண்ணப்பிக்கும் முறை இரு தினங்களில் தொடங்கப்பட இருக்கின்றது .

    கோவைக்கு கூடுதல் பஸ்கள் வேண்டும் என்ற கோரிக்கையினை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வைத்திருக்கின்றனர். இவை நிறைவேற்றபடும்.

    வேலைக்கு வரும் போது என்ன ஆர்வத்துடன் வருகின்றீர்களோ, அதே ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும் .

    ஏழைகளுக்காக போக்குவரத்து துறை செயல்படுகின்றது என்பது இங்குதான். தமிழகத்தினை போல எல்லா கிராமத்திற்கும் போக்குவரத்து பிற மாநிலங்களில் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெண்களுக்கான மகளிர் விடியல் பயணம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிர் விலையில்லா பேருந்தில் பயணம் செய்வது 40 சதவீதத்தில் இருந்து 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    முதல் 100 மின்சார பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு, சென்னையில் சோதனை ஒட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் வர உள்ளது. சீக்கிரம் பிரச்சனைகள் தீர்வு அடையும். அரசின் மஞ்சள் நிற பேருந்துகளும், பள்ளி வாகனங்களுக்கும் வேறு வேறான மஞ்சள் நிறம் இருக்கும். இரண்டையும் வேறு வேறாக வித்தியாசப்படுத்தும் வகையில் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×