search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் பரிந்துரை"

    • நோயால் பாதிக்கப்படுவோரில் சிலர் அவர்களாவே மருந்துக்கடைகளுக்குச்சென்று மருந்து வாங்கி உட்கொள்கின்றனர்.
    • வைரஸ் காரணமாக மூக்கு,தொண்டைப்பகுதியில் ஏற்படும் சளி, மருந்துகள் ஏதுமின்றி தானாகவே சரியாகி விடும்.

    பல்லடம்:

    காய்ச்சல்,சளி,போன்ற நோய்களுக்கு தாமாகவே மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பல்லடம் சுகாதாரத்துறையினர் தெரிவித்ததாவது:- பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பருவநிலை மாற்றத்தின் காரணமாக சளி, காய்ச்சல், இருமல், போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றில் வைரஸ் காய்ச்சல், அதிக அளவில் காணப்படுகிறது. இந்தநிலையில் நோயால் பாதிக்கப்படுவோரில் சிலர் அவர்களாவே மருந்துக்கடைகளுக்குச்சென்று மருந்து வாங்கி உட்கொள்கின்றனர். பயம் மற்றும் அறியாமையால் அதிகப்படியான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதும் தெரியவந்துள்ளது. உடனடியாக நிவாரணம் பெற அதிகப்படியான மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் வைரஸ் காரணமாக மூக்கு,தொண்டைப்பகுதியில் ஏற்படும் சளி, மருந்துகள் ஏதுமின்றி தானாகவே சரியாகி விடும். மார்புச்சளி,ஒவ்வாமைச்சளி ஆகியவற்றுக்கு சிகிச்சை தேவைப்படும் நிலையில், டாக்டரின் பரிந்துரையுடன் தரப்படும் மாத்திரைகளைச் சாப்பிட்டால் சரியாகி விடும். டாக்டரிடம் தங்களுக்கு வந்துள்ள நோய்க்கான காரணத்தை, முழுமையாகக்கேட்டுத் தெரிந்து கொண்டு,அவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் சாப்பிட்டால் நோய்கள் சரியாகி விடும் .இதை விடுத்து நோய் வந்தவுடன் தாங்களாகவே மருந்துக்கடைகளுக்குச்சென்று உடனடியாக நிவாரணம் பெற அதிகப்படியான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே டாக்டரின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கருக்கலைப்பு மாத்திரைகளை விற்க டாக்டர் பரிந்துரை அவசியம் என மருந்து வணிகர்களுக்கு அறிவரைக்கப்பட்டது.
    • அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக உதிரப்போக்கினால் உயிரிழப்புகள் கூட பல நேரங்களில் நடக்கிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் மருந்தாளுநர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம், மாவட்ட மருதாளுநர்கள் சங்கம் சார்பில் பார்மசிஸ்ட்களுக்கான கருத்தரங்கம், பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மருந்தாளுநர்கள் சங்க மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை வகித்தார். மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னையா, மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். கண்டாச்சிபுரம் நிர்வாகி விஜய ஆனந்த் வரவேற்றார். முகாமில் ஓய்வு பெற்ற மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் ஜெயராஜ், திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா, அரசு மருத்துவர்கள் பாக்கிய–லட்சுமி, ரவிக்குமார், மதன்ராஜ், விஷ்ணுகுமரன், சுமித்ரா, மருந்தாளுநர்கள் சங்க மாநில செயலாளர் வேங்கடசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கி பேசினர்.

    திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா பேசுகை–யில், தற்போது நமது நாட்டில் புதிதாக பரவி வரும் நோய்கள் குறித்தும், அவற்றுக்கு வழங்கப்படும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்கும் வகையில் மாத்தி–ரைகளை பரிந்துரைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு மருந்து–களின் வீரீயம், வருங்காலத்தில் நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை விட ஆண்டிபயாட்டிக்ஸ் பயன்படுத்து–வதால் அதிக பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.  மேலும் இதுபோன்று கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை பெறாமல் கடைகளில் விற்கக் கூடாது, இதனால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக உதிரப்போக்கினால் உயிரிழப்புகள் கூட பல நேரங்களில் நடக்கிறது. எனவே கருக்கலைப்பு செய்வது குறித்து மகப்பேறு நல மருத்துவரின் ஆலோசனை பெறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது. மருந்தாளுநர்கள், நோயாளி–கள் இடையேயான புரிதல் இருக்க வேண்டும் என அவர் பேசினார். இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி அண்ணாமலை நன்றி கூறினார்.

    ×