என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Abortion Pill"
- கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்வதாக மருத்துவ துறையினருக்கு தகவல் கிடைத்தது.
- மருந்து சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என மருந்தக உரிமையாளர்களை எச்சரித்தனர்
கடலூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மருந்தக ங்களில் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்வதாக மருத்துவ துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைனையடுத்து வேப்பூர் அரசு வட்ட தலைமை டாக்டர் அகிலன் கண்ணன் , மருந்தக ஆய்வாளர் நாராயணசாமி , வேப்பூர் சப்- இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட குழுவினர் வேப்பூர் பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் கரு கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து கரு கலைப்பு மாத்திரைகள் முறையான மருந்து சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என மருந்தக உரிமையாளர்களை எச்சரித்தனர் இந்த திடீர் ஆய்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கருக்கலைப்பு மாத்திரையை, மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
- கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வந்த கருக்கலைப்பு மாத்திரையை, மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்நாட்டில் பெண்கள் கருகலைப்பு செய்வது, நீண்டகாலமாக நீடித்து வந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மாத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் கலைக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த தடை விதித்தும் கட்டுப்பாடு விதித்தும் கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம், அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரை மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
- ஆவட்டியில் உள்ள மருந்த கத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டு உள்ளார்.
- ரத்தக் கசிவு காரணமாக சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர்:
திட்டக்குடி அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த வர் குணசேகரன். அவரது மனைவி கஸ்தூரி (வயது32)இவருக்கு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் கருவுற்ற கஸ்தூரி கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஆவட்டியில் உள்ள மருந்த கத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டு உள்ளார்.நேற்று அவருக்கு அடி வயிறு வலிப்பதாகவும் ரத்த கசிவு ஏற்படுவதாகும் கூறி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சை பெற்றார்.கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை அவரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் கஸ்தூரி ஆவட்டியில் உள்ள போலி மருத்துவர் சுரேஷ் என்ப வரிடம் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட தாக கூறியுள்ளார். ரத்தக் கசிவு காரணமாக அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
சுரேஷ் ஏற்கனவே ராமநத்தம் போலீசாரால் வழக்கு பதிவு செய்து மருத்துவ வழக்கில் சிறைக்குச் சென்று தற்போது பிணையில் வந்து ராமநத்தம் காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்து போட்டு வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து அவர் இது போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் கஸ்தூரி கூறியுள்ளது உண்மையா அந்த கடையில் தான் மாத்திரை வாங்கினாரா என்பது குறித்து திட்டக்குடி டிஎஸ்பி காவியா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கருக்கலைப்பு மாத்திரைகளை விற்க டாக்டர் பரிந்துரை அவசியம் என மருந்து வணிகர்களுக்கு அறிவரைக்கப்பட்டது.
- அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக உதிரப்போக்கினால் உயிரிழப்புகள் கூட பல நேரங்களில் நடக்கிறது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் மருந்தாளுநர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம், மாவட்ட மருதாளுநர்கள் சங்கம் சார்பில் பார்மசிஸ்ட்களுக்கான கருத்தரங்கம், பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மருந்தாளுநர்கள் சங்க மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை வகித்தார். மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னையா, மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். கண்டாச்சிபுரம் நிர்வாகி விஜய ஆனந்த் வரவேற்றார். முகாமில் ஓய்வு பெற்ற மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் ஜெயராஜ், திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா, அரசு மருத்துவர்கள் பாக்கிய–லட்சுமி, ரவிக்குமார், மதன்ராஜ், விஷ்ணுகுமரன், சுமித்ரா, மருந்தாளுநர்கள் சங்க மாநில செயலாளர் வேங்கடசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கி பேசினர்.
திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா பேசுகை–யில், தற்போது நமது நாட்டில் புதிதாக பரவி வரும் நோய்கள் குறித்தும், அவற்றுக்கு வழங்கப்படும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்கும் வகையில் மாத்தி–ரைகளை பரிந்துரைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு மருந்து–களின் வீரீயம், வருங்காலத்தில் நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை விட ஆண்டிபயாட்டிக்ஸ் பயன்படுத்து–வதால் அதிக பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இதுபோன்று கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை பெறாமல் கடைகளில் விற்கக் கூடாது, இதனால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக உதிரப்போக்கினால் உயிரிழப்புகள் கூட பல நேரங்களில் நடக்கிறது. எனவே கருக்கலைப்பு செய்வது குறித்து மகப்பேறு நல மருத்துவரின் ஆலோசனை பெறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது. மருந்தாளுநர்கள், நோயாளி–கள் இடையேயான புரிதல் இருக்க வேண்டும் என அவர் பேசினார். இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி அண்ணாமலை நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்