search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருக்கலைப்பு மாத்திரைகளை டாக்டர் பரிந்துரை இல்லாமல் விற்க கூடாது
    X

    விழுப்புரத்தில் மருந்தாளுநர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

    கருக்கலைப்பு மாத்திரைகளை டாக்டர் பரிந்துரை இல்லாமல் விற்க கூடாது

    • கருக்கலைப்பு மாத்திரைகளை விற்க டாக்டர் பரிந்துரை அவசியம் என மருந்து வணிகர்களுக்கு அறிவரைக்கப்பட்டது.
    • அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக உதிரப்போக்கினால் உயிரிழப்புகள் கூட பல நேரங்களில் நடக்கிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் மருந்தாளுநர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம், மாவட்ட மருதாளுநர்கள் சங்கம் சார்பில் பார்மசிஸ்ட்களுக்கான கருத்தரங்கம், பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மருந்தாளுநர்கள் சங்க மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை வகித்தார். மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னையா, மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். கண்டாச்சிபுரம் நிர்வாகி விஜய ஆனந்த் வரவேற்றார். முகாமில் ஓய்வு பெற்ற மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் ஜெயராஜ், திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா, அரசு மருத்துவர்கள் பாக்கிய–லட்சுமி, ரவிக்குமார், மதன்ராஜ், விஷ்ணுகுமரன், சுமித்ரா, மருந்தாளுநர்கள் சங்க மாநில செயலாளர் வேங்கடசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கி பேசினர்.

    திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா பேசுகை–யில், தற்போது நமது நாட்டில் புதிதாக பரவி வரும் நோய்கள் குறித்தும், அவற்றுக்கு வழங்கப்படும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்கும் வகையில் மாத்தி–ரைகளை பரிந்துரைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு மருந்து–களின் வீரீயம், வருங்காலத்தில் நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை விட ஆண்டிபயாட்டிக்ஸ் பயன்படுத்து–வதால் அதிக பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இதுபோன்று கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை பெறாமல் கடைகளில் விற்கக் கூடாது, இதனால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக உதிரப்போக்கினால் உயிரிழப்புகள் கூட பல நேரங்களில் நடக்கிறது. எனவே கருக்கலைப்பு செய்வது குறித்து மகப்பேறு நல மருத்துவரின் ஆலோசனை பெறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது. மருந்தாளுநர்கள், நோயாளி–கள் இடையேயான புரிதல் இருக்க வேண்டும் என அவர் பேசினார். இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி அண்ணாமலை நன்றி கூறினார்.

    Next Story
    ×