search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜே.சி.பி. வாகனத்தின்"

    • ஜே.சி.பி. வாகனத்தின் ரூ.5 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் மாயமாகி இருந்தது.
    • தாலுகா போலீசார் சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்ப ட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஜே.சி.பி. வாகனத்தின் உதிரிபாகங்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளை யத்தில் அரசு சார்பில் தரை மட்டம் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தனியார் நிறுவனத்தினர் டெண்டர் எடுத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த கட்டுமான பணிகளுக்காக ஜே.சி.பி., பொக்லைன் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5-ந் தேதி மாலை முதல் 6-ந் தேதி அதிகாலை சுமார் 2 மணி வரை 2 ஜே.சி.பி. ஆப்ரேட்டர்கள் வேலை செய்து விட்டு ஜே.சி.பி. வாகனத்தை அப்பகுதியிலேயே விட்டு சென்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு பணியாளர்கள் வந்து பார்த்த போது ஜே.சி.பி. வாகனத்தின் ரூ.5 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் மாயமாகி இருந்தது. பல இடங்களில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால், யாரோ திருடி சென்றிருப்பதை அறிந்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து தாலுகா போலீசார் சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்ப ட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஜே.சி.பி. வாகனத்தின் உதிரிபாகங்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்

    ×