search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜே.இ.இ. தேர்வு"

    • ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.,) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத், கன்னடம், மலையாளம், மராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடக்கவுள்ளது.

    திருப்பூர்:

    உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.,) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்தாண்டுக்கான நுழைவுத்தேர்வு வருகிற 2024 - 25 கல்வியாண்டுக்கு, ஜே.இ.இ., முதன்மை மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ் என இரண்டு தேர்வுகளாக நடைபெற உள்ளது. ஜனவரி 24 -ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை, ஜே.இ.இ., முதன்மை தேர்வு நடக்கிறது.

    முதன்மை தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத், கன்னடம், மலையாளம், மராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடக்கவுள்ளது.

    இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வெழுத தகுதியான மாணவர்கள் https://jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் வருகிற 30-ந்தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்கள், சந்தேகங்கள் இருப்பின் அதனை 011 - 40759000 அல்லது 011 - 69227700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

    ×