search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ராம் தாக்கூர்"

    • இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் இன்று பா.ஜ.க. எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
    • இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவியது. இதையடுத்து முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதற்கிடையே இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் இன்று பா.ஜ.க. எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜெய்ராம் தாக்கூர் எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    கூட்டத்தைத் தொடர்ந்து ஜெய்ராம் தாக்கூர், தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்நிலையில், ஜெய்ராம் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க. குடும்பத்தின் ஒவ்வொரு பொறுப்பையும் நிறைவேற்றுவது எங்களின் முதன்மைப் பொறுப்பு. சட்டசபை கட்சித் தலைவர் பொறுப்பை எனக்கு வழங்கிய அனைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை நெருங்கியது
    • மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதை நிறுத்தமாட்டேன் என ஜெய்ராம் தாக்கூர் பேட்டி

    சிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில், மாலை நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.

    ஆளும் பாஜக தோல்வியை தழுவி உள்ளது. இதையடுத்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த அவர், பதவியில் இல்லாவிட்டாலும் மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதை நிறுத்த மாட்டேன் என்றார்.

    பாஜக தோல்வி அடைந்துள்ள நிலையில், சில விஷயங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டி உள்ளது. சில பிரச்சனைகள் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுபற்றி விளக்கம் கேட்டு மேலிடம் அழைத்தால் டெல்லி செல்வேன் என்றும் ஜெய்ராம் தாக்கூர் கூறினார்.

    ×