search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இமாச்சல பிரதேசத்தில் பாஜக தோல்விமுகம்: ராஜினாமா செய்தார் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இமாச்சல பிரதேசத்தில் பாஜக தோல்விமுகம்: ராஜினாமா செய்தார் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

    • காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை நெருங்கியது
    • மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதை நிறுத்தமாட்டேன் என ஜெய்ராம் தாக்கூர் பேட்டி

    சிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில், மாலை நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.

    ஆளும் பாஜக தோல்வியை தழுவி உள்ளது. இதையடுத்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த அவர், பதவியில் இல்லாவிட்டாலும் மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதை நிறுத்த மாட்டேன் என்றார்.

    பாஜக தோல்வி அடைந்துள்ள நிலையில், சில விஷயங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டி உள்ளது. சில பிரச்சனைகள் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுபற்றி விளக்கம் கேட்டு மேலிடம் அழைத்தால் டெல்லி செல்வேன் என்றும் ஜெய்ராம் தாக்கூர் கூறினார்.

    Next Story
    ×