search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா நினைவு இடம்"

    • மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கும் சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி எதிர்க்கட்சித் தலைவரான அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அடையாறில் உள்ள தனது வீட்டில் உள்ள ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கும் சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், ரமணா, வளர்மதி, கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, டி.கே.எம். சின்னையா, மாதவரம் மூர்த்தி, கமலக்கண்ணன்.

    மாவட்டச் செயலாளர்கள் தி.நகர் சத்யா, வெங்க டேஷ்பாபு, வேளச்சேரி அசோக், விருகை ரவி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆர்.ஜே.ராஜேஷ், கே.பி.கந்தன், வாலாஜாபாத் கணே சன் மற்றும் பெரும் பாக்கம் ராஜசேகர், துரைப் பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, கழக மாணவரணி துணைச் செயலாளர் வக்கீல் ஆ.பழனி, இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் வி.சுனில், வடபழனி சத்திய நாராயணமூர்த்தி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம். அம்மா நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலை நிறுத்தி மக்களுக்கான ஒரே இயக்கம் அ.இ.அ.தி.மு.க. என்பதை நம் செயலில் உறுதிப்படுத்துவோம் என்றும் மக்கள் பணியே மகேசன் பணியாகக் கொண்டு அயராது உழைப்போம். பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றியே போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுக்கும் பொம்மை முதல்-அமைச்சர் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். முடிவு கட்டுவோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×