search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா நினைவு தினம்"

    • மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கும் சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி எதிர்க்கட்சித் தலைவரான அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அடையாறில் உள்ள தனது வீட்டில் உள்ள ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கும் சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், ரமணா, வளர்மதி, கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, டி.கே.எம். சின்னையா, மாதவரம் மூர்த்தி, கமலக்கண்ணன்.

    மாவட்டச் செயலாளர்கள் தி.நகர் சத்யா, வெங்க டேஷ்பாபு, வேளச்சேரி அசோக், விருகை ரவி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆர்.ஜே.ராஜேஷ், கே.பி.கந்தன், வாலாஜாபாத் கணே சன் மற்றும் பெரும் பாக்கம் ராஜசேகர், துரைப் பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, கழக மாணவரணி துணைச் செயலாளர் வக்கீல் ஆ.பழனி, இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் வி.சுனில், வடபழனி சத்திய நாராயணமூர்த்தி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம். அம்மா நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலை நிறுத்தி மக்களுக்கான ஒரே இயக்கம் அ.இ.அ.தி.மு.க. என்பதை நம் செயலில் உறுதிப்படுத்துவோம் என்றும் மக்கள் பணியே மகேசன் பணியாகக் கொண்டு அயராது உழைப்போம். பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றியே போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுக்கும் பொம்மை முதல்-அமைச்சர் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். முடிவு கட்டுவோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
    • பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, போட்டோ ஷூட் ஆட்சியை நடத்தி வரும் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். உறுதிமொழியை அவர் வாசிக்க தொண்டர்கள் திருப்பி சொன்னார்கள்.

    ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கொண்ட உறுதிமொழி வருமாறு:-

    மக்களாட்சியின் மகத்துவத்தையும், மாண்பையும் எடுத்துரைத்த, இதய தெய்வம் அம்மா வழியில், தொடர்ந்து பயணிப்போம். தடம் மாறாது, தடுமாறாது, நாம் கொண்ட கொள்கையில் லட்சியத்தோடு, வீறு நடை போடுவோம். எதிரிகளை விரட்டியடிப்போம். துரோகிகளை தூள் தூளாக்குவோம் என்று, வீர சபதம் ஏற்கிறோம்.

    குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலரச் செய்திட, தமிழ் நாடு, தலைசிறந்த மாநிலமாய்த் திகழ்ந்திட, பார் போற்ற, தமிழகம் சிறந்து விளங்கிட, அயராது உழைப்போம்.

    பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, போட்டோ ஷூட் ஆட்சியை நடத்தி வரும் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம், ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு ரத்தென்றார். ஆட்சிக்கு வந்தவுடன், கல்விக் கடன் ரத்தென்றார். ஆட்சிக்கு வந்தவுடன், விலைவாசி குறையுமென்றார். ஆட்சிக்கு வந்தவுடன், குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றார். செய்தாரா?

    கழக ஆட்சியிலும், மழை வந்தது; புயல் வந்தது. அப்போதெல்லாம் மக்களுக்கு, பல்வேறு வகைகளில், துணை நின்றோம்.

    தற்போதைய ஆட்சியிலே, பத்து நாள் மழைக்கே, தலைநகர் சென்னை, பரிதவித்தது.

    மக்கள் நலத்திட்டங்களை, நிறுத்தாதே, நிறுத்தாதே. பொய் வழக்குகளைப் போட்டு, கழகத்தை, முடக்கி விட முடியுமா? அழித்துவிட முடியுமா? எதிரிகள் ஒரு பக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதிவலைகளை அறுத்தெறிவோம். பொய் வழக்குகளை முறித்தெறிவோம்.

    பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. இத்தேர்தலில், வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட, சூளுரைப்போம்! நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்று, வீர சபத மேற்கிறோம்!

    தமிழ்நாடு தழைக்க, தமிழ் நாடு தழைக்க, உழைத்திடுவோம்! புரட்சித் தலைவரின் பெரும் புகழையும், புரட்சித் தலைவியின் பெரும் புகழையும், எந்நாளும் போற்றிடுவோம்.

    இவ்வாறு உறுதிமொழி ஏற்றினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
    • போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் ஜெ. தீபா ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து விளக்கேற்றினார்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி ஓபிஎஸ் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

    இதில் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட தலைவர்கள் சைதை எம்.எம்.பாபு, ரெட்சன் அம்பிகாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே, போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் ஜெ. தீபா ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்து உறுதிமொழிகள் மேற்கொள்ள உள்ளனர்.
    • ஜெயலலிதா நினைவு நாள் அன்று அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காலத்தால் அழியாத புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய ஜெயலலிதாவின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும். தன்னலம் கருதாது, தமிழ்நாட்டு மக்களுக்காக தன் அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்துப் பாடுபட்ட ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு கழகத்தினரின் இன்றியமையாத கடமையாகும்.

    ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளான வருகிற 5-ந்தேதி காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், கழக இடைக்காலப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

    தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்து உறுதிமொழிகள் மேற்கொள்ளவும் உள்ளனர்.

    இந்நிகழ்ச்சிகளில், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    ஜெயலலிதா நினைவு நாள் அன்று அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படங்களை வைத்து, மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×