என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆதரவாளர்கள் புடைசூழ பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை
- ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
- போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் ஜெ. தீபா ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து விளக்கேற்றினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி ஓபிஎஸ் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
இதில் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட தலைவர்கள் சைதை எம்.எம்.பாபு, ரெட்சன் அம்பிகாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் ஜெ. தீபா ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்