search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜியோபோன்"

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய சலுகையை அறிவித்திருக்கிறார். இதில் பயனர்கள் ஜியோபோனினை ரூ.501 விலையில் பெற முடியும்.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வழங்கினார். ஜியோபோன் 2, ஜியோ ஜிகாஃபைபர் அறிவிப்புகளுடன் ஜியோபோன் சார்ந்த தகவல்களையும் அவர் வெளியிட்டார்.

    கடந்த ஆண்டு ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோன் வாங்குவோருக்கு மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ் பயனர்கள் ரூ.501 மட்டும் செலுத்தி ஜியோபோன் பெற முடியும். பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் ஃபீச்சர்போனினை வழங்கி, புதிய ஜியோபோனுக்கு ரூ.501 மட்டும் செலுத்தி வாங்கிட முடியும். இந்த சலுகை ஜூலை 21, 2018 முதல் வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் ரூ.1,500 செலுத்தி புதிய ஜியோபோன் வாங்கி மூன்று ஆண்டுகளில் அதனை திரும்ப வழங்கி முன்பணத்தை திரும்ப பெற முடியும். அந்த வகையில் ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இன்று (ஜுலை 5) நடைபெற்ற ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோபோனில் விரைவில் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட இருப்பகாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோபோனில் 2.4 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே, டூயல்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    ஜியோபோனில் 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ நெட்வொர்க், ஜியோ செயலிகள் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் 24 இந்திய மொழிகளில் ஜியோபோன் பயன்படுத்தும் வசதி மற்றும் வாய்ஸ் கமான்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
    ஜியோபோனில் பிரபல கூகுள் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதனால் ஜியோபோன் பயன்படுத்துவோர் விரைவில் கூகுள் சேவைகளை பயன்படுத்த முடியும்.
      



    ரிலையன்ஸ் ஜியோவின் ஃபீச்சர்போனான ஜியோபோன் விரைவில் பிரபல கூகுள் சேவைகளான கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் மேப்ஸ், யூடியூப் மற்றும் கூகுள் சர்ச் உள்ளிட்டவை பெற இருக்கிறது.

    ஜியோபோன் கைஓஎஸ் (KaiOS) இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. அமெரிக்காவை சேர்ந்த கைஓஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஜியோபோனுக்கான இயங்குதளத்தை வழங்குகிறது. அந்த வகையில் கைஓஎஸ் நிறுவனம் கூகுளுடன் இணைந்து பிரபல கூகுள் சேவைகளை கைஓஎஸ் பயனர்களுக்கு வழங்க இருக்கின்றது.

    கூகுள் நிறுவனம் கைஓஎஸ் நிறுவனத்தில் சுமார் 2.2 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இது அடுத்த தலைமுறை பயனர்களிடம் இன்டர்நெட் வசதியை கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும்.



    “இந்த முதலீடை பயன்படுத்தி கைஓஎஸ் இயங்குதளத்தை வேகமாக வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதோடு, உலகின் மற்ற சந்தைகளிலும் வெளியிட்டு ஸ்மார்ட் ஃபீச்சர் போன்களின் மூலம் இதுவரை இணையம் பயன்படுத்தாதோருக்கு இன்டர்நெட் வசதியை கொண்டு சேர்க்க முடியும்,” என கைஓஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரியான செபஸ்டியன் கோட்வில் தெரிவித்திருக்கிறார்.

    கைஓஎஸ் இயங்குதளம் இணையம் சார்ந்த தளம் ஆகும். இந்த இயங்குதளம் ஹெச்.டி.எம்.எல்.5 (HTML5), ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) மற்றும் சி.எஸ்.எஸ். (CSS) ஓபன் ஸ்டான்டர்டுகளை பயன்படுத்துகிறது. இந்தியாவில் 2018 ஜனவரி மாத வாக்கில் வெளியிட்டப்பட்ட நிலையில், இந்த இயங்குதளம் மொபைல் ஓஎஸ் சந்தையில் 15% பங்குகளை பெற்றிருக்கிறது. 

    டிவைஸ் அட்லஸ் வெளியிட்டிருக்கும் சமீபத்திய மொபைல் வெப் இன்டலிஜென்ஸ் ஆய்வு அறிக்கையின் படி கைஓஎஸ் இயங்குதளம் இந்தியாவில் ஆப்பிள் ஐஓஎஸ்-ஐ பின்னுக்குத்தள்ளி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொபைல் போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக ஆன்ட்ராய்டு இருக்கிறது.



    ஜியோபோன் சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே
    - டூயல் கோர் பிராசஸர்
    - 512 எம்பி ரேம்
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 2 எம்பி பிரைமரி கேமரா
    - 0.3 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    வாய்ஸ் கமான்ட் வசதி கொண்ட ஜியோபோனில் 22 இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும். இத்துடன் இந்த மொபைலில் ஜியோ செயலிகள் ஏற்கனவே பிரீஇன்ஸ்டால் செய்யப்படுகிறது.
    சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் சுமார் 15% பங்குகளை பெற்றிருக்கிறது. 

    ரிலையன்ஸ் ஜியோபோனை தொடர்ந்து நோக்கியா, சாம்சங் மற்றும் டெக்னோ உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோபோன் அமோக விற்பனையை சந்தித்து வரும் நிலையில், நோக்கியாவின் ரீ-என்ட்ரி உள்ளிட்டவை சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையின் 38% வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

    சமீபத்திய தகவல்கள் கவுன்ட்டர்பாயின்ட் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 2018 முதல் காலாண்டு நிலவரப்படி நோக்கியா ஹெச்எம்டி நிறுவனம் 14% பங்குகளையும், ஐடெல் நிறுவனம் 13% பங்குகளையும் சாம்சங், டெக்னோ நிறுவனங்கள் 6% பங்குகளையும் பெற்றிருக்கின்றன.



    ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 50 கோடி ஃபீச்சர்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர் எண்ணிக்கையை பொருத்து சர்வதேச அளவில் ஃபீச்சர்போன்களுக்கான வரவேற்பு இன்றும் அதிகமாகவே இருக்கிறது. என கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சர்வதேச ஃபீச்சர்போன் விற்பனையில் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஃபீச்சர்போன் விற்பனை மட்டும் 43% பங்குகளை பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    சில ஃபீச்சர்போன் பயனர்கள் டிஜிட்டல், பொருளாதாரம் மற்றும் போதுமான கல்வியறிவு இல்லாதது போன்ற காரணங்களால் விலை அதிகமாக விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத சூழல் நிலவுவதாக ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×