search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.கே. வாசன்"

    • காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
    • கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, கர்நாடக அரசிடம் பெற வேண்டிய காவிரி நீர் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு உதவிட வேண்டும். காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடக துணை முதல்-மந்திரி, முதல்-மந்திரி ஆகியோர் காவிரி நீர் விவகாரத்தில், மேகதாது அணைப் பிரச்சினையில், தமிழகத்துக்கு எதிரான போக்கை கடைபிடிக்கின்ற வேளையில் தமிழக தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் யார் பக்கம். கர்நாடக காங்கிரஸ் பக்கமா அல்லது தமிழக விவசாயிகள் பக்கமா.

    அதாவது கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும். எனவே காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவின் அத்துமீறிய பேச்சை, செயலை கண்டித்து, ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக மீனவர்களுக்கு அளித்துவரும் தொடர் அச்சுறுத்தலால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
    • தற்பொழுது கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கச்சத்தீவையொட்டிய இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 15 மீனவர்களையும் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மிகவும் கண்டிக்கதக்கது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகளை சேதப்படுத்துவதும் என்று இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு அளித்துவரும் தொடர் அச்சுறுத்தலால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

    இனிமேலும் தாமதிக்காமல் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நிரந்தர தீர்வுகாண வேண்டும். தற்பொழுது கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். மீனவர்கள் பாதுகாப்புடன், அச்சமில்லாமல் தங்கள் தொழிலை மேற்கொள்ள, அமைதியான சூழ்நிலை நிலவ, உரிய முயற்சியை மேற்கொள்வது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×