search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துரிமை பயிலரங்கு"

    • காளீஸ்வரி கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை பயிலரங்கு நடந்தது.
    • அதிக மனித வளத்தை கொண்ட இந்தியா 40 வது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில், இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜியின் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான அறிவுசார் சொத்துரிமை மற்றும் ஐபி மேலாண்மை' குறித்த பயிலரங்கு நடந்தது. ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், அறிவுசார் சொத்துரிமை மற்றும் அறிவுசார் சொத்து பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கினார். காப்புரிமை, நகல் உரிமை, வர்த்தக முத்திரை, தொழில் துறை வடிவமைப்புகள், புவியியல் குறியீடுகள் போன்ற பல்வேறு வகையான அறிவுசார் சொத்துக்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

    உலகளாவிய கண்டு பிடிப்பு குறியீடு 2022-ல், அதிக மனித வளத்தை கொண்ட இந்தியா 40 வது இடத்தில் உள்ளதாகவும், இந்தியா மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளில் இருந்து மூன்றில் ஒரு காப்புரிமை விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்றும் இருப் பினும் இந்தியாவை காட்டிலும் சீனா 25- 30 மடங்கு அதிக காப்புரிமைகளை தாக்கல் செய்கிறது என்றும் தெரிவித்தார்.கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளை பாதுகாக்க அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணர்வுடன் மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    ×