search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து தகாறில் தாய்"

    • தகராறு முற்றிய நிலையில் அங்கிருந்த அரிவாளைக்கொண்டு தாய், அண்ணனை ராமலிங்கம் தாக்கியுள்ளார்.
    • கொடுமுடி போலீசார் ராமலிங்கத்தை கைது செய்தனர்.

    ஈரோடு:

    கொடுமுடி அருகே உள்ள சென்னசமுத்திரம் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பெரியக்காள் (49). இவருக்கு சக்திவேல், ராமலிங்கம் என்ற 2 மகன்கள் உள்ளனர். பெரியக்காளின் கணவர் கிட்டப்பன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார்.

    இந்நிலையில் வருந்தியா பாளையத்தில் பெரிய க்காளுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய பூமி உள்ளது. இந்த பூமி சம்பந்த மாக பெரியக்காளின் இளைய மகன் ராமலிங்க த்துக்கும், பெரியக்காளுக்கும் பிரச்சனை இருந்து வந்து ள்ளது.

    இந்த நிலையில் கடந்த 22- மாலை பெரி யக்காளின் மூத்த மகன் சக்திவேல் மற்றும் பெரிய க்காள் 2 பேரும் ராமலி ங்கத்திடம் வருந்தியாபாளை யத்தில் உள்ள விவசாய நிலம் குறித்து பேசியுள்ளனர்.

    அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு முற்றிய நிலையில் அங்கிருந்த அரிவாளை க்கொண்டு பெரியக்கா ளையும், சக்திவேலையும் ராமலிங்கம் தாக்கியுள்ளார்.

    இதனால் பெரியக்காள் மற்றும் சக்திவேலுக்கு காய ங்கள் ஏற்பட்டது. இதனை யடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற 2 பேரும், கரூரில் உள்ள அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    சம்பவம் குறித்து பெரியக்காள் அளித்த புகாரின்பேரில் கொடுமுடி போலீசார் ராமலிங்கத்தை கைது செய்தனர். அவரு க்கும் காயங்கள் இருந்ததால் அவர் தற்போது பெருந்து றையில் உள்ள அரசு மருத்து வகல்லூரி மருத்துவம னையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×