search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள் விபத்தில்"

    • அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள கன்னி விநாயகர் புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பத்மாவதி
    • மோட்டார் சைக்கிளை பத்மாவதி ஓட்டிச்சென்றார். அவர் மகள் தமிழிசை பின்னால் அமர்ந்து இருந்தார்.


    நாகர்கோவில் :அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள கன்னி விநாயகர் புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பத்மாவதி (வயது 45). இவரும், இவரது மகள் தமிழிசை (25) என்பவரும் நேற்று மாலை காவல்கிணற்றில் இருந்து தனது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் கன்னி விநாயகர்புரத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பத்மாவதி ஓட்டிச்சென்றார். அவர் மகள் தமிழிசை பின்னால் அமர்ந்து இருந்தார். இவர்களது மோட்டார் சைக்கிள் கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளை டாஸ்மாக் மதுக்கடை அருகில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது இவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிரே கிருஷ்ணன்புதூரை சேர்ந்த டூலிப் ஆன்றோ (34) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் பத்மாவதியும், தமிழிசையும் தூக்கி வீசப்பட்டனர். இதற்கிடையில் பின்னால் வந்த வாகனம் ஒன்று பத்மாவதி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த பத்மாவதி தனது மகள் தமிழிசை கண் எதிரே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் தமிழிசை புகார் செய்தார். அதன்பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அங்கு அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×