search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் வாலிபர் பலி"

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீடு கட்டுமான பணிக்காக மணல் அள்ளியபோது மண் சரிந்து பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன், விவசாயி. இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 21), பட்டதாரி. இவரது நண்பர் பேளூரைச் சேர்ந்த முத்து.

    லோகேஸ்வரன் வீட்டு கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக மணல் தேவைப்படுவதால் லோகேஸ்வரனும் அவரது நணபர் முத்துவும் பேளூர் வசிஷ்டநதி தடுப்பணை அருகே மணல் எடுக்க முடிவு செய்தனர்.

    அதன்படி இருவரும் நள்ளிரவில் அங்கு சென்று குழி தோண்டி மணல் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர் பாராதவிதமாக மணல் சரிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் இருவரும் மணலுக்குள் புதைந்தனர். ஆனால் முத்து மட்டும் தட்டுத்தடுமாறி வெளியே வந்து உறவினர்களிடம் வி‌ஷயத்தை கூறினார்.

    உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லோகேஸ்வரனை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். காயம் அடைந்த முத்துவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு லோகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாசில்தார் வள்ளிதேவி, மற்றும் வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×