search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஷல்ஸ்"

    இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் டோர்னியர் விமானத்தை செஷல்ஸ் அதிபர் டேனி பயூரேவிற்கு பரிசாக அளித்தார். #Seychelles #SushmaSwaraj #DannyFaure
    புதுடெல்லி :

    ஆறு நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் அதிபர் டேனி பயூரே இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அவரை நேற்று வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவது தொடர்பாக டேனி பயூரே - மோடி விவாதித்தனர்.

    சந்திப்பின் முடிவில் இருநாடுகளுக்கு இடையே சில துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி செஷல்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டுக்கு டோர்னியர் விமானத்தை  பரிசாக வழங்க முடிவு செய்யப்படிருந்தது.

    இந்நிலையில், டெல்லி பாலம் விமான நிலையத்தில் டேனி பயூரேவிற்கு இந்தியா சார்பில் டோர்னியர் விமானத்தை வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பரிசாக அளித்தார்.  வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    டோர்னியர் விமானம், கடற்கரை பகுதிகளில் ரோந்து அல்லது அச்சுறுத்தல்களை கண்காணிக்கும் திறன் உடையது. ஏற்கெனவே செஷல்ஸ் நாட்டிற்கு ஒரு டோர்னியர் விமானம் உள்பட இரண்டு ஹெலிகாப்டர்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Seychelles #SushmaSwaraj #DannyFaure
    செஷல்ஸ் தீவில் இந்திய கடற்படை தளம் அமைக்க அந்நாட்டு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்ட நிலையில், அதனை நிறைவேற்ற பணியாற்றுவோம் என மோடி - டேனி பயூரே இணைந்து தெரிவித்துள்ளனர். #Seychelles #India #AssumptionIsland
    புதுடெல்லி:

    இந்திய பெருங்கடலில் இருக்கும் நாடான செஷல்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள அஸ்சம்ப்சன் தீவில் இந்திய கடற்படை தளம் அமைக்க கடந்த ஜனவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கடற்படை தளம் அமைந்தால் இந்திய பெருங்கடல் பிராந்தியம் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் சீனாவின் கை ஓங்காது என இந்தியா கணக்கிட்டது.

    ஆனால், இந்த திட்டத்தால் தமது நாட்டு பகுதியை இன்னொரு நாட்டுக்கு தாரை வார்த்தது போல ஆகிவிடும் என குற்றம் சாட்டிய செஷல்ஸ் எதிர்க்கட்சிகள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இதனால், இந்த திட்டத்திற்கான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை.



    இந்த சூழ்நிலையில், 5 நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் அதிபர் டேனி பயூரே இந்தியா வந்துள்ளார். இன்று டெல்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அஸ்சம்ப்சன் தீவில் இந்திய கடற்படை தளம் அமைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    சந்திப்பின் முடிவில் இருநாடுகளுக்கு இடையே சில துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. செஷல்ஸ் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா 100 மில்லியம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

    இதனை அடுத்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த போது, இரு நாடுகளின் உரிமைகளின் அடிப்படையில் அஸ்சம்ப்சன் தீவில் இந்திய கடற்படை தளம் அமைப்பதில் இணைந்து பணியாற்ற உறுதியுடன் இருப்பதாக கூறினர். 
    ×