என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செல்லியாண்டி அம்மன் கோவில்"
- செல்லியாண்டிம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
- கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பவானி:
பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக செல்லியண்டியம்மன்- மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் கும்பா பிஷேகம் நடைபெற்று சுமார் 12 ஆண்டுகள் முடி ந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக அரசின் விதிமுறைகள் படி 3 ஆண்டுகள் கும்பாபிஷேக பணிகள் நிறுத்தி வைக்க ப்பட்டிருந்தது.
கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகள் முடிந்த நிலையில் செல்லி யாண்டி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தமிழக அரசிடம் கும்பாபிஷேகம் நடத்திட கோரிக்கை வைத்தி ருந்தனர்.
தமிழக அரசின் உத்தரவுப்படி இந்து அறநிலைத்துறை மூலம் செல்லியாண்டிம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதனைத்தொ டர்ந்து கோவில் வளாகத்தில் பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில், தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், கும்பாபிஷேக திருப்பணி விழா குழு தலை வர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழை ப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்ப ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில்,
பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லியாண்டி அம்மன்-மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா மிக சிறப்பான முறை யில் நடத்துவது பற்றியும், பாலாலயம் நடத்துவது குறித்து செல்லாண்டி அம்மனிடம் வாக்கு கேட்டு அதில் அடுத்த மாதம் 11-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று பாலாலயம் நடத்த உறுதி அளித்ததை அடுத்து கோபுர கலசத்திற்கு மட்டும் பாலாலயம் செய்து கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ள பட உள்ளது.
பின்னர் சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தரை தளம் கருங்கற்கலில் அமை த்தல், கோபுரம் வர்ணம் தீட்டி புதுப்பித்தல், பரா மரிப்பு பணி மேற்கொ ள்ளுதல் குறித்து ஆலோ சனை வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பவானி நகர த்தில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க., ப.ம.கா., பா.ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள், 36 சமூக கட்டளைதார்கள், கோவில் நிர்வாகத்தினர், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கவுன்சிலர் சரவணன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்