search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்முறை"

    • நிள அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே நடைபெற்றது.
    • செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 922 நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் கடந்த 15-ந்தேதி தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 102 நிள அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே நடைபெற்றது. 

    மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், உதவி இயக்குனர்கள் திருநாவுக்கரசு, சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினார்கள். இதில் பங்கேற்றுள்ள 102 நில அளவர் மற்றும் வரைவாளர்கள் பயிற்சி முடித்து கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியில் ஈடுபட உள்ளனர். பயிற்சியில் ஈடுபடும் நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. கடலூர் கோட்ட ஆய்வாளர் நாராயணன் நன்றி கூறினார்.

    • ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.
    • என்.சி.சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை தாங்கினார். என்.சி.சி அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். என்.சி.சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி, சிறப்பு நிலைய அலுவலர் ஏழுமலை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து தீ விபத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது பாதுகாப்புடன் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

    இதில் கல்லூரி ஆசிரியர்கள், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தீ பாதுகாப்பு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

    • பழங்களை தொட்டு உணர்ந்து அதன் நிறம், மணம், வடிவம் அதன் தன்மை பற்றியும், சமையலில் அதன் பங்கு பற்றியும் கற்றுணர்ந்தனர்.
    • பிரட் பேக்கரிக்கு சென்று பிரட், பன் ரொட்டி, பிஸ்கட்ஸ், கேக் மற்றும் அனைத்து பேக்கரி உற்பத்திகளையும் கண்டு அதன் செயல்முறை விளக்கம் குறித்து அறிந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி மாணவ -மாணவியர்கள் கல்வி களப்பயணங்களை மேற்கொண்டனர். கல்வி பாடத்திட்டத்தின் ஒரு அங்கமான கல்வி களப்பயணங்களை, சீர்காழி தலைமை அஞ்சலகம் மற்றும் கடவுச்சீட்டு அலுவலக த்திற்கும், செம்மங்குடி பிரட் தொழிற்சாலைக்கும் மற்றும் காய்கனி மொத்த விற்பனை நிலையங்களுக்கும் களப்பய ணங்களை மேற்கொ ண்டனர். பள்ளி முதல்வர் வித்யா கள பயணங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பள்ளி மாணவ-மாணவி யர்கள் பள்ளி வாகனங்களில் களப்பயண இடத்திற்கு அழைத்துச் செல்ல ப்பட்டனர். மழலையர் பள்ளி குழந்தைகளை, வகுப்பு ஆசிரியைகள் அருணா மற்றும் சிந்து ஆகியோர் தலைமையேற்று அழைத்துச் சென்றனர். மாம்பழம் மற்றும் காய்கனி வளாகத்திற்கு சென்று காய்கறி மற்றும் பழங்களை தொட்டு உணர்ந்து அதன் நிறம், மணம், வடிவம் அதன் தன்மை பற்றியும், சமையலில் அதன் பங்கு பற்றியும் கற்றுணர்ந்தனர்.

    இரண்டாம் வகுப்பு மாணவர்கள் மகாலட்சுமி ஆசிரியையின் தலைமையில் செம்மங்குடி பிரட் பேக்கரிக்கு சென்று பிரட், பன், ரொட்டி, பிஸ்கட்ஸ், கேக் மற்றும் அனைத்து பேக்கரி உற்பத்திகளையும் கண்டு, அதன் செயல்முறை விளக்கம், அது எவ்வாறு பேக்கிங் செய்யப்படுகின்றது போன்ற செயல்களை அறிந்து கொண்டனர்.

    1-ம் வகுப்பு மாணவ -மாணவியர்கள் ஆசிரியை பரணி ஸ்ரீ தலைமையில் சீர்காழி தலைமை அஞ்சலகம் மற்றும் கடவுச்சீட்டு அலுவலகம் ஆகியவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பை பெற்றனர். அஞ்சலக செயல்பாடுகள், பயன்கள், சேவைகள் ஆகியவற்றை அலுவலக அதிகாரிகள் செயல்முறை விளக்கத்துடன் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். பள்ளியின் நிர்வாக அதிகாரி அன்பழகன் நன்றி தெரிவித்தார்.

    ×