search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The Journey"

    • பழங்களை தொட்டு உணர்ந்து அதன் நிறம், மணம், வடிவம் அதன் தன்மை பற்றியும், சமையலில் அதன் பங்கு பற்றியும் கற்றுணர்ந்தனர்.
    • பிரட் பேக்கரிக்கு சென்று பிரட், பன் ரொட்டி, பிஸ்கட்ஸ், கேக் மற்றும் அனைத்து பேக்கரி உற்பத்திகளையும் கண்டு அதன் செயல்முறை விளக்கம் குறித்து அறிந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி மாணவ -மாணவியர்கள் கல்வி களப்பயணங்களை மேற்கொண்டனர். கல்வி பாடத்திட்டத்தின் ஒரு அங்கமான கல்வி களப்பயணங்களை, சீர்காழி தலைமை அஞ்சலகம் மற்றும் கடவுச்சீட்டு அலுவலக த்திற்கும், செம்மங்குடி பிரட் தொழிற்சாலைக்கும் மற்றும் காய்கனி மொத்த விற்பனை நிலையங்களுக்கும் களப்பய ணங்களை மேற்கொ ண்டனர். பள்ளி முதல்வர் வித்யா கள பயணங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பள்ளி மாணவ-மாணவி யர்கள் பள்ளி வாகனங்களில் களப்பயண இடத்திற்கு அழைத்துச் செல்ல ப்பட்டனர். மழலையர் பள்ளி குழந்தைகளை, வகுப்பு ஆசிரியைகள் அருணா மற்றும் சிந்து ஆகியோர் தலைமையேற்று அழைத்துச் சென்றனர். மாம்பழம் மற்றும் காய்கனி வளாகத்திற்கு சென்று காய்கறி மற்றும் பழங்களை தொட்டு உணர்ந்து அதன் நிறம், மணம், வடிவம் அதன் தன்மை பற்றியும், சமையலில் அதன் பங்கு பற்றியும் கற்றுணர்ந்தனர்.

    இரண்டாம் வகுப்பு மாணவர்கள் மகாலட்சுமி ஆசிரியையின் தலைமையில் செம்மங்குடி பிரட் பேக்கரிக்கு சென்று பிரட், பன், ரொட்டி, பிஸ்கட்ஸ், கேக் மற்றும் அனைத்து பேக்கரி உற்பத்திகளையும் கண்டு, அதன் செயல்முறை விளக்கம், அது எவ்வாறு பேக்கிங் செய்யப்படுகின்றது போன்ற செயல்களை அறிந்து கொண்டனர்.

    1-ம் வகுப்பு மாணவ -மாணவியர்கள் ஆசிரியை பரணி ஸ்ரீ தலைமையில் சீர்காழி தலைமை அஞ்சலகம் மற்றும் கடவுச்சீட்டு அலுவலகம் ஆகியவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பை பெற்றனர். அஞ்சலக செயல்பாடுகள், பயன்கள், சேவைகள் ஆகியவற்றை அலுவலக அதிகாரிகள் செயல்முறை விளக்கத்துடன் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். பள்ளியின் நிர்வாக அதிகாரி அன்பழகன் நன்றி தெரிவித்தார்.

    ×