search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "procedure"

    • காயம் அடைந்த பிரபாகர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • புகாரின் பேரில் ரவிக்குமார், ராபர்ட் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி அருகே ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 51). இவர் குமாரபுரம் சந்திப்பில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று பிரபாகர் சூப்பர் மார்க்கெட்டில் இருந்தார். அப்போது ஆவரை குளத்தை சேர்ந்த ரவிக்குமார் (45), ராபர்ட் (40) ஆகிய இருவரும் பொருட்கள் வாங்க வந்தனர். அப்போது பிரபாகரிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ரவிக்குமார், ராபர்ட் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் பிரபாகர் கடையை பூட்டிவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குமாரபுரம்- கன்னியாகுமரி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ரவிக்குமார், ராபர்ட் இருவரும் பிரபாகர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார்கள்.

    பின்னர் அவரிடம் தகராறு செய்ததுடன் மோட்டார் சைக்கிளை காலால் மிதித்து கீழே தள்ளியதுடன் பிரபாகரை கையால் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். காயம் அடைந்த பிரபாகர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து பிரபாகர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரவிக்குமார், ராபர்ட் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 294(பி), 329, 506(2) ஐ.பி.சி. ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவிக்குமார் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ஊரமைப்புத்துறையிலும் விண்ணப்பிக்க வேண்டிய லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
    • லாக் இன் பாஸ்வேர்டு கொடுத்து விண்ணப்பித்தால், பரிசீலிக்கப்பட்டு உரியதாக இருந்தால் அடுத்த கட்டத்துக்கு ஏற்கப்படும். அல்லது நிராகரிக்கப்படும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் புதிய லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு, உள்ளாட்சி, மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குனரகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஆகியவற்றால் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகர ஊரமைப்புத்துறைக்குமான அதிகாரம் பகிர்ந்தளிக்க ப்பட்டுள்ளது.

    இப்போது மாநகராட்சிகளிலும், நகர ஊரமைப்புத்துறையிலும் விண்ணப்பிக்க வேண்டிய லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.ஆனால் கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட மற்ற உள்ளாட்சிகளில், வெவ்வேறு முறைகளில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பரப்பின் அடிப்படையில் நகர ஊரமைப்புத்துறைக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

    வெவ்வேறு அதிகார அமைப்புகளில் திட்ட அனுமதியை பெறுவதற்கு ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியது உள்ளது. இதை எளிமைப்படுத்தவும், விரைவுபடுத்தவும், திட்ட அனுமதிக்கு ஒற்றை சாளர முறையை கொண்டு வர வேண்டுமென்று, கிரெடாய் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நீண்ட காலமாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    இதன் அடிப்படையில் 2022 மே மாதத்தில் இருந்து, நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒற்றைச்சாளர முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.அனைத்து உள்ளாட்சிகளிலும் இதை நடைமுறைப்படுத்துவதோடு, உள்ளாட்சி மற்றும் நகர ஊரமைப்புத்துறைக்கும் ஒரே முகப்பில் விண்ணப்பிக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான புதிய மென்பொருள் (SINGLE WINDOW PORTAL) வடிவமைக்கப்பட்டுள்ளது.இனிவரும் நாட்களில் கிராம பஞ்சாயத்துகள் உட்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், எவ்வளவு பெரிய லே-அவுட், கட்டிடமாக இருந்தாலும் ஒரே ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்படும்.

    வரும் அக்டோபர் 2-ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.லே-அவுட் அமைக்கவும், கட்டடம் கட்டவும் விரும்புவோர், onlineppa.tn.gov.in என்ற இணைய முகப்பில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதில் லாக் இன் பாஸ்வேர்டு கொடுத்து விண்ணப்பித்தால், பரிசீலிக்கப்பட்டு உரியதாக இருந்தால் அடுத்த கட்டத்துக்கு ஏற்கப்படும். அல்லது நிராகரிக்கப்படும்.

    அதன்பின் ஆவணங்களை பதிவேற்றம் செய்து, லே-அவுட் விண்ணப்பத்துக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1.50 பைசா வீதமும், கட்டடத்துக்கு சதுர மீட்டருக்கு இரண்டு ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். லே-அவுட் அல்லது கட்டிடத்தில் பரப்பை பொறுத்து, அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு அல்லது நகர ஊரமைப்புத்துறைக்கு செல்லும்.உரிய அதிகார அமைப்பின் அலுவலர்கள், கள ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் திட்ட அனுமதி வழங்குவர்.

    புதிய இணைய முகப்பை எப்படி கையாள்வது என்பது குறித்து தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், பதிவு பெற்ற என்ஜினீயர்கள் ஆகியோருக்கு, மென்பொருளைத் தயாரித்துள்ள, இன்டர்லேஸ் நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி, மதுரைக்குப் பின் கோவையில் கற்பகம் பல்கலைக்கழகத்தில் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சிகளின் பணியாளர்கள், பதிவு பெற்ற என்ஜினீயர்கள் பங்கேற்றனர்.

    • நிள அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே நடைபெற்றது.
    • செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 922 நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் கடந்த 15-ந்தேதி தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 102 நிள அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே நடைபெற்றது. 

    மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், உதவி இயக்குனர்கள் திருநாவுக்கரசு, சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினார்கள். இதில் பங்கேற்றுள்ள 102 நில அளவர் மற்றும் வரைவாளர்கள் பயிற்சி முடித்து கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியில் ஈடுபட உள்ளனர். பயிற்சியில் ஈடுபடும் நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. கடலூர் கோட்ட ஆய்வாளர் நாராயணன் நன்றி கூறினார்.

    • திண்டிவனம் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ், கழிவுநீர் குழாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது,
    • பள்ளம் தோண்டும் பணியின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிராஜ் மிர்ஜித் என்ற வடமாநில தொழிலாளர் உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், திண்டிவனம் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ், கழிவுநீர் குழாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டும் பணியின்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிராஜ் மிர்ஜித் என்ற வடமாநில தொழிலாளர் உயிரிழந்தார்.அவரது உடலுக்கு மாவட்ட கலெக்டர் பழனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தெரிவிக்கை யில், கடந்த 11-ந்தேதி திண்டிவனம் நகராட்சியில் வார்டு எண் 19, ரொட்டிக்கார தெருவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பாதாள சாக்கடை திட்டத்தில் சுமார் 7 அடி ஆழத்தில் கழிவுநீர் குழாய் அமைப்பதற்கு மண் தோண்டும் பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிராஜ் மிர்ஜித் உட்பட 4 நபர்கள் ஈடுபட்டிருந்தனர். மாலை சுமார் 4 மணி அளவில் குழாய்கள் பதிக்கப்பட்டு மண் மூடுவதற்கு ஏதுவாக தடுப்பு பலகை அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சிராஜ் மிர்ஜித் என்பவர் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார். இதில் பலத்த அடிப்பட்ட சிராஜ் மிர்ஜித்தை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில்சிராஜ் மிர்ஜித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்து போன சிராஜ் மிர்ஜித்க்கு தொழிலாளர் குழு காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ரூ.15 லட்சம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறந்துவிட்ட சிராஜ் மிர்ஜித் உடல் பிரேத பரிசோதனை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது முண்டியம் பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுஜாதா, விழுப்புரம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் திரு.அன்பழகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.
    • என்.சி.சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை தாங்கினார். என்.சி.சி அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். என்.சி.சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி, சிறப்பு நிலைய அலுவலர் ஏழுமலை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து தீ விபத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது பாதுகாப்புடன் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

    இதில் கல்லூரி ஆசிரியர்கள், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தீ பாதுகாப்பு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

    • விவசா யிகளின் கோரிக்கையினை ஏற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடை பெற்றது.
    • விவசாயிகளின் அறுவடை பணிகளுக்கு ஒத்துழைப்புவழங்கிட வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 2023ஆண்டுக்கு தனியார் நெல்அறுவடை எந்திரங்களுக்கான வாடகையினை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டுமென்ற விவசா யிகளின் கோரிக்கையினை ஏற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் விவசா யிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்கள் உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறி ந்ததன் அடிப்படையில் தனியார் நெல் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்துகடலூர், மாவட்டக லெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி 2023 ஆண்டுக்கு சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்ய , பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.2,400 , டயர் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1,750 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே நெல் அறுவடை எந்திர உரிமையாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளின் அறுவடை பணிகளுக்கு ஒத்துழைப்புவழங்கிட வேண்டும். 

    தவறும் பட்சத்தில் கூடுதல் வாடகை கோரும் எந்திர உரிமையாளர்கள் மீதுசம்மந்தப்பட்ட பகுதி வட்டாட்சியர்கள், வேளாண்மைப் பொறி யியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் என கலெக்டர் பாலசு ப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்ப ட்டுள்ளது.

    ×