search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை தியாகராய நகர்"

    • இந்த மேம்பாலம் 570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா பங்கேற்றனர்.

    சென்னை:

    சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகர் வரும் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேம்பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த மேம்பாலம் 570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த பாலத்தில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆகாய நடை மேம்பாலத்தால் தியாகராய நகரில் இனி கூட்ட நெரிசல் குறையும்.

    ×