search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டை நகராட்சி"

    • ராமலெட்சுமி திடீரென, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
    • மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களில் 13 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது.

    கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது நகராட்சியின் 2-வது வார்டில் ராமலெட்சுமி என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    தேர்தலில் அ.தி.மு.க.-10, தி.மு.க.-7, பா.ஜனதா-4, சுயேட்சை-2, காங்கிரஸ்-1 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ராமலட்சுமி அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் ஆதரவுடன் செங்கோட்டை நகராட்சி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்நிலையில் ராமலெட்சுமி திடீரென, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அதன் பின்னர் அவருக்கும், சில கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நகராட்சி கூட்டங்களின்போது அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நகராட்சி தலைவி ராமலெட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் கடந்த மாதம் 19-ந் தேதி கடிதம் வழங்கினர்.

    அந்த வகையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 10 கவுன்சிலர்களும், பா.ஜனதாவை சேர்ந்த 4 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட கடிதம் நகராட்சி பொறுப்பு கமிஷனரான கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் சுகந்தியிடம் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர், நகராட்சி தலைவிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம், வாக்கெடுப்பு இன்று (18-ந் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு கமிஷனர் (பொறுப்பு) சுகந்தி தலைமையில் விவாதம், வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் தொடங்கியது.

    இதில் மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களில் 13 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். இதனால் போதிய பெரும்பான்மை கவுன்சிலர்கள் வராத காரணத்தினால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக கமிஷனர் சுகந்தி அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ராமலெட்சுமியின் நகராட்சி தலைவர் பதவி தப்பியது.

    • பட்டப்பகலில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயங்கர கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

    இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல நகராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் வெளியே செல்வதற்காக மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட தயாரானார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. பட்டப்பகலில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயங்கர கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஷாம்சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே ராஜேசின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதகாட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தியது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் கொலையை கண்டித்தும், தப்பி ஓடிய கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரியும் ராஜேசின் உறவினர்கள் அவரது நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எனினும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×